புதன், 7 ஜூலை, 2010

சித்தன்கேணியில்,வாள், கத்தி, பொல்லுகள் சகிதம் நுழைந்தது ஒரு கும்பல்.

ஆயுதமுனையில் குடும்பத்தவர்களை அச்சுறுத்தி நகைகள், பணம், கைத்தொலைபேசி என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றது ஆயுதக்குழு ஒன்று. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் அதிகாலை 2 மணிக்குச் சித்தன்கேணியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று அதிகாலை 2 மணியளவில் வட் டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு வாள், கத்தி, பொல்லுகள் சகிதம் நுழைந்தது ஒரு கும்பல். ஆசிரியரின் தந்தையான சிவபாதம் (வயது 65) என்பவரைப் பொல்லால் தாக்கிக் காயப்படுத்திவிட்டு ஆசிரியரையும் அவரின் மனைவி பிள்ளைகளையும் ஆயுத முனையில் மிரட்டிய கும்பல் 31 பவுண் நகை, 2500 ரூபா பணம், கையடக்கத் தொலைபேசி, சைக்கிள் என்பவற்றைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றது.
குடும்பத்தினரை ஆயுதமுனையில் பிடித்து வைத்திருந்த கொள்ளையர் அலுமாரிகள், உடைகள் என்பவற்றையும் ஆராய்ந்த பின்பே சென்றனர். தொலைபேசி மூலம் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற கொக்ககோலா போத்தல், அலவாங்கு, ரெஸ்ரர் (மின் பரிசோதிக்கும் கருவி), பொல்லுகள் போன்ற தடயங்களை எடுத்துச் சென்றனர்.

கொள்ளையரின் தாக்குதலுக்கு இலக்காகிக் காயமடைந்த முதியவர் சங்கானை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புலிகளால் உருவாக்கப்பட்ட மக்கள் படையின் எஞ்சிய சமுக விரோதிகள்  இன்னும் உலாவுகிறார்கள் போலும்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

கடவுளே எங்களைப் புலிகளிடமும் வெளிநாட்டுப் புலி ஆதரவாளர்களிடமும் இருந்து காப்பாற்றையா: இப்படிக்கு இலங்கை வாழ் அப்பாவித் தமிழர்கள்