சனி, 10 ஜூலை, 2010

ஜாஎல பொலிஸாரினால் கைது,குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் வைத்தியர்

குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் வைத்தியர் கைது

பிறந்து 3 நாள்களேயான குழந்தையொன்றை விற்பனை செய்வதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வைத்திய ஒருவர் நேற்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி 75000 ரூபாவிற்கு குறித்த குழந்தையை விற்பனை செய்வதற்கு அந்த வைத்தியர் முயற்சித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

டபிள்யூ.ஏ.சாந்த லொக்கு பண்டார என்ற வைத்திய அதிகாரியே ஜாஎல பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபராவார்.

குழந்தைகளை விற்பனை செய்வது தொடர்பில் குறித்த வைத்தியருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது

கருத்துகள் இல்லை: