செவ்வாய், 6 ஜூலை, 2010

அரை நிர்வாண கோலத்தில் பெண் கைதி தக

சேலம் பெண்கள் கிளை சிறை அதிகாரிகள் நிர்வாணப்படுத்தி "ப்ளு பிலிம் ' எடுப்பதாகக் கூறி, அரை நிர்வாணமாக ரோட்டில் நின்று தகராறில் ஈடுபட்ட பெண் கைதியால், பரபரப்பு ஏற்பட்டது. சேலம், பெரியகொல்லப்பட்டியை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகள் மைதிலி(25). இவரது கணவர் சரவணன். மைதிலி மீது, அரூர், ராசிபுரம், சேலம் உள்ளிட்ட இடங்களில், திருட்டு வழக்கு உள்ளது. ஆறுக்கும் மேற்பட்ட திருட்டு வழக்கில் சிக்கிய மைதிலியை, போலீசார் கைது செய்து, அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர். பெண்கள் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மைதிலியை, அவரது தாய் சாந்தி அடிக்கடி பார்த்து செல்வது வழக்கம்.

சில வாரங்களுக்கு முன் சாந்தி, பெண்கள் கிளை சிறைக்கு வந்து மகள் மைதிலியை சந்தித்தார். சிறைக்குள் பெரிய பொட்டலம் விழுந்தது. "பாரா' சென்ற காவலர்கள் பொட்டலத்தை பிரித்து பார்த்து போது, அதில் "ஹான்ஸ், பான்பராக், புகையிலை' உள்ளிட்ட போதை வஸ்துகள் இருந்தன. கிளை சிறைக்கு வெளியே சுற்று சுவருக்கு பின்னால் இருந்து, சாந்தி போதை வஸ்து பொட்டலம் போட்டதை போலீசார் கண்டு பிடித்தனர். சிறைக்குள் உள்ள மகள் மைதிலி மூலமாக போதை பொருட்களை விற்பனை செய்ய, சாந்தி சுற்றுச் சுவருக்கு வெளியே இருந்து பொட்டலம் வீசியது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. சிறைக்குள் விதி முறை மீறி போதை வஸ்து பொட்டலம் வீசிய சாந்தியை, போலீஸார் கைது செய்து கிளை சிறையில் அடைத்தனர்.

வழக்கு சம்பந்தமாக மைதிலியை ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, நாமக்கல் போலீஸார் சேலம் பெண்கள் சிறைக்கு வந்தனர். சிறையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட மைதிலி, வேனில் ஏறாமல், சேலையை அவிழ்த்து வீசினார். அரை குறை உடையுடன், கூச்சலிடத் துவங்கினார். போலீசார், மைதிலியின் அரை நிர்வாண கோலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சிறை காவலர்கள் மைதிலியை உள்ளே அழைத்து செல்ல அனுமதி மறுத்தனர். "சிறையில் இருந்து கைதியை வெளியே அழைத்து சென்றால், நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு அழைத்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும்' என, தெரிவித்து விட்டு சிறை கதவை மூடி விட்டனர். இதனால், அரை நிர்வாண கோலத்துடன் மைதிலி ரோட்டில் நின்று, கிளை சிறை அதிகாரிகள் மீது சரமாரியாக புகார் தெரிவித்தார். "சிறைக்குள் பெண் கைதிகளை சித்ரவதை செய்கின்றனர். பார்வையாளர்களிடம் லஞ்சமாக பணம் வாங்குகின்றனர். கேள்வி கேட்கும் கைதிகள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மைதிலி சிறை முன்பு நின்று கூச்சலிட்டபடி இருந்தார்.

பெண் கைதி மேலாடை இல்லாமல், ரோட்டில் நின்று பேராட்டத்தில் ஈடுபட்டதை கண்டு பொதுமக்கள் கூட்டம் கூடியது. ""என் மீதும், என் தாய் மீதும் வேண்டுமென்றே பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆடையை களைந்து, போட்டோ, வீடியோ எடுத்து சிறை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். ஏன் என்று கேட்டால், "ப்ளூ பிலிம்' எடுத்து வெளியிடுவதாக மிரட்டுகின்றனர். கைதிகளை பார்க்க வருபவர்களிடம் 300, 400 ரூபாய் லஞ்சமாக பணம் கேட்கின்றனர். நாங்களே சிறைக்குள் அடைபட்டு கிடக்கிறோம். எப்படி, சிறை அதிகாரிகளுக்கு லஞ்சமாக பணம் கொடுக்க முடியும்? சித்ரவதை செய்யும் சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

அஸ்தம்பட்டி போலீசார் சிறை அதிகாரிகளிடம் பேசி, அரை நிர்வாண கோலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதி மைதிலியை சிறைக்குள் அழைத்து சென்றனர்.
கருமம் ராமசாமி - karumathur,இந்தியா
2010-07-06 08:35:50 IST
கருமம். ஒரு பனைமரத்துக்கு சேலை கட்டினாலே நம்பாளுங்க வெடுக்குன்னு வெறைச்சி நின்னு மேட்டருக்கு ஆசைப்படுவாங்க. அதுலவும் இது நாட்டுக்கட்டை மாதிரி இருக்குறா. படத்தை பாக்கும்‌போதே கொஞ்சம் தூக்கத்தான் செய்யுது. சும்மா இருப்பானுங்களா. யோ... போலீசு... நீ செஞ்சதெல்லாம் தப்புஇல்லயா. நீ எடுத்தத வீடியோவா, சிடியா படமா போட்டு வெளியிடுய்யா. அட்டைபடத்துல தினமலர்ல போட்ருக்குற படத்த போட்டாலே போதும். நன்றி தினமலர்னு போட மறந்துடாத. நல்லா விக்கும் போல இருக்கு. அலோ தினமலர் எடிட்டர். உமக்கு நாங்க என்னய்யா துரோகம் செஞ்சோம். காலாகாலமா பேப்பரை படிச்சதோட... இப்ப இன்டர்நெட்டுலயும் படிச்சி கமென்டல்லாம் போடுறோம். ‌நாங்க போடுறோம்ல... அத மாதிரி நீங்களும் எங்களுக்கு ஏதாச்சும் போடணும்னு நினைச்சா... இந்த படத்தை கொஞ்சம் பெருசா போடுங்கய்யா. நீங்க நல்லா இருப்பீங்க சாமீ. மறுபடியும் சொல்றேன். இந்த பொண்ண வச்சி அந்த மாதிரி படம் எடுத்தா நல்லா ஓடும். தயவு செய்து இந்த கமண்டை வெளியிடுங்கள். என்றும் இளமையா இருக்குற தினமலருக்கு என்னய மாதிரி இளைஞர்களின் மனசு புரியும்னு நினைக்கிறேன். நன்றி. வணக்கம். மீண்டும் சந்திப்போம்....
நல்லவன் - bangkok,டோகோ
2010-07-06 08:20:16 IST
இந்த பொண்ணு ஏதோ சின்னதா திருடிட்டு உள்ள போய் இருக்கும். ஆனால் உள்ள இருக்கறவன்லாம் பெரிய பெரிய திருடனுங்க. அசந்தா டவுசர அவுத்துட்டு உட்டுருவாணுக. ஒவ்வொருத்தன் தொப்பையும் பாத்தாவே தெரியும். வெளி நாட்ல எல்லாம் போலிச பாத்தாவே ஒரு மிடுக்கு இருக்கும். அசத்தலான யூனிபார்ம், கட்டு கோப்பான உடம்பு, கைத்துப்பாக்கி(தோட்டாவோட), மொடோர் பைக் , கார், உதவி செய்யும் மனப்பான்மை, தவறு செய்தாலும் அடிக்க மாட்டார்கள். கைது செய்து நீதிபதியிடம் ஒப்படைப்பார்கள். நம்ப ஊர்ல உள்ள போலீஸ்.... லஞ்சம் வாங்கி தின்னே வளர்த்த பெரிய சைஸ் தொப்பை. கூன் விழுந்த கிழம் மாதிரி கையில ஒரு குச்சி. கூர்காவ விட ஒரு கேவலமான் யூனிபார்ம். தீபாவளிக்கு மட்டுமே துப்பாக்கி பார்க்கும் கண்கள். பூ விக்கிரவ, புண்ணாக்கு விக்கிரவ, பொம்ம விக்கிரவ எல்லாத்தையும் மிரட்டி அஞ்சு பத்து பிடுங்கி தின்பது. தீபாவளி, பொங்கல்னா எல்லா கம்பனி வாசல்லயும் பிச்சகாரன் மாதிரி அஞ்சு பத்து பிச்சை எடுப்பது. எல்லா லாரிகாரனையும் மடக்கி அஞ்சு பத்து கேப்பது. அவன் பணம் கொடுத்தான்னா ராக்கெட்டே வேணும்னாலும் கடத்தலாம். இங்க சவால் விட்டு சொல்றேன், ஒரு போலீஸ் காரனாவது திருடன ஓடி போய் பிடிச்சிட்டா நான் மொட்ட அடிச்சிக்கிறேன். எப்படிடா விளங்கும் நம்ம இந்தியா....

கருத்துகள் இல்லை: