திங்கள், 5 ஜூலை, 2010

பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் தனியார் காணிகள் துரித கதியில் உரிமையாளர்களிடம்


யாழ்ப்பாண அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் தனியார் காணிகள் துரித கதியில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என அரசாங்க அதிபர் கே.கணேஷ் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் ஆரம்பத்தில் தங்கியிருந்தவர்களிடம் காணிகள் மற்றும் வீடுகள் ஒப்படைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய மாகாணசபையின் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையிலான குழுவினர் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது அரசாங்க அதிபர் கே.கணேஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீள் குடியேற்றுவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: