திங்கள், 5 ஜூலை, 2010

குமரி: போலி குழந்தைகள் காப்பக நிர்வாகி கைது

கன்னியாக்குமரி அருகே காப்பகத்தில் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்த நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாக்குமரி அருகே அகதீஸ்வரத்தில் உள்ள குழந்தை காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தை அகஸ்டீன் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு கரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 32 குழந்தைகள் தங்கி இருந்தனர்.
அனுமதியின்றி காப்பகம் நடத்தி வருவதாக புகார் வந்ததையடுத்து, 32 குழந்தைகளும் மீட்கப்பட்டு நெல்லையில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காப்பகத்தில் குழந்தைகளை அடித்து துன்புறுத்தியதாக அவர்களது பெற்றோர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
அனுமதியின்றி காப்பகம் நடத்திய அகஸ்டினை போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோன்று கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: