செவ்வாய், 6 ஜூலை, 2010

சில்வெஸ்த்திரிMP, மண்ணெண்ணெய் முதற்கொண்டு அனைத்துப் பொருட்களிலும் கொள்ளை இலாபமடித்து


ஈ.பி.டி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்த்திரி அலென்டின் உதயன் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை!


யாழ். குடாநாட்டில் கடந்த யுத்தகால சூழ்நிலையில் மக்கள் சொல்லொணாத் துயரங்களில் மூழ்கியிருந்தபோது மண்ணெண்ணெய் முதற்கொண்டு அனைத்துப் பொருட்களிலும் கொள்ளை இலாபமடித்து  எமது அப்பாவி மக்களைச்சுரண்டி சாப்பிட்டு வளர்ந்த குடும்பம் இப்போது நெடுந்தீவு பெண்களை  மானபங்கப்படுத்துவதில் ஈடுபட்டு வருவது எமது பெண்கள் சமூகத்தின் கண்டனத்திற்குரிய விடயமாகும் என்பதையும் இந்த சபையில் நான் கூறிக்கொள்ளவிரும்புகிறேன்.
இதே நேரம் யாழ். குடாநாட்டில் தீவுப்பகுதி பெண்கள் தொடர்பாக குறிப்பாக நெடுந்தீவு பெண்கள் தொடர்பாக இந்த உயரிய சபையில் ஒருவர் மிகவும் கேவலமாக கதைத்துள்ளார்.  இது மொத்த நெடுந்தீவு பெண்கள் சமூகத்தினையும் அவமானத்திற்;குள்ளாக்கும் செயற்பாடகும்.

எனவே தங்களது குறுகிய வர்த்தக அரசியல் சுயலாபம் கருதி எமது தீவகப்   பெண்களை அவமானப்படுத்தும்  நோக்கில் இவ்வாறன தவறானதும் கண்டனத்திற்குரியதுமான பேச்சுக்களை இவர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.

கருத்துகள் இல்லை: