ஞாயிறு, 4 ஜூலை, 2010

மட்டக்குள பொதுமக்கள் பொலிஸாருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்ததாக

மட்டக்குளி பொலிஸ் நிலையப் பொலிஸாருக்கும் அப்பிரதேசவாசிகளுக்கும் இடையில் ​நேற்று இரவு எட்டு மணியளவில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுத் தாக்க முயன்றனர். அவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸாரும் தீவிரமாக ஈடுபட்டனர்.

இராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். இதனால் இப்பிரதேசத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் வரை பதற்ற நிலைமை நீடித்தது. போதைபொருளை உடைமையில் வைத்திருந்தார் என்கிற சந்தேகத்தில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை மட்டக்குளி பொலிஸ் நிலையப் பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை அறிந்து ஆத்திரம் அடைந்ததாலேயே அப்பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பொலிஸாருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: