சனி, 10 ஜூலை, 2010

மகளை ரூ.4000 க்கு விற்ற பெற்றோர் கைது

வதோதரா : மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 8 வயத மகளை சட்ட விரேதமாக ரூ.4000 ஆயிரத்திற்கு விற்ற பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்மகல், லீலாபென் தம்பதியர் தங்களது மகளை 3 மாதத்திற்கு முன் ரூ.4000 க்கு அவரது மாமாவிடம் விற்றுள்ளனர். அவர்கள் அப்பெண்ணை ரமேஷ்பாய் மற்றும் ரேகா தம்பதிக்கு விற்றுள்ளனர். அவர்கள் அப்பெண்ணை வீட்டு வேலைகள் செய்ய சொல்லி பல்வேறு விதங்களில் துன்புறுத்தி உள்ளனர். அந்த 8 வயது சிறுமி அவர்களிடம் இருந்து தப்பி வந்து, குவாலியர் போலீசில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில் அப்பெண்ணின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: