சனி, 10 ஜூலை, 2010

் 3000இற்கும் மேற்பட்ட சட்டவிரோத கருக்கலைப்பு நிலையங்கள் இயங்கிவருவதா

இலங்கையில் நாளொன்றுக்கு 1000 கருச்சிதைவு..!

நாடளாவிய ரீதியில் இயங்கிவருகின்ற சட்டவிரோதமான கருக்கலைப்பு நிலையங்களினூடாகவும் கருவுறுதல் பற்றிய அறிவின்மை காரணமாகவும் நாளொன்றுக்கு சராசரியாக 1000 கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக அதிர்ச்சித்தகவல் தெரிவிக்கிறது.

நாடளாவிய ரீதியில் 3000இற்கும் மேற்பட்ட சட்டவிரோத கருக்கலைப்பு நிலையங்கள் இயங்கிவருவதாக சுகாதார கல்விச் சபையின் ஊடகத்துறை தலைவர், வைத்தியர் சாந்த ஹெட்டியாராச்சி தெரிவிக்கின்றார். மிகவும் ரகசியமான முறையில் இந்த கிளினிக்குகள் இயங்கிவருவதால் சரியான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

திருமணமாகிய, திருமணமாகாத பெண்களின் கருக்கலைப்பு தொடர்பான போதிய அறிவின்மை காரணமாகவும் பொருளாதார வசதியின்மையினாலேயுமே இப்படியான கருச்சிதைவுகள் இடம்பெறுகின்றன. அதுமட்டுமல்லாமல் இளம்பெண்கள் தவறான முறையில் கருவுறுகிறார்கள். இவர்கள் முறையான பாலியல் கல்வி அறிவின்மையால் முறையற்ற கருச்சிதைவுக்கு ஆளாகின்றனர். அதேபோல் திருமணமான பெண்களின் பொருளாதாரன பிரச்சினை காரணமாக சீரான குடும்பக்கட்டுப்பாடு முறைமை தெரியாமையினாலேயுமே இப்படியான கருச்சிதைவுகளுக்குக் காரணமாகின்றன எனவும் மேலும் தெரிவித்தார் வைத்தியர் சாந்த ஹெட்டியாராச்சி.
-Lakna Paranamanna
www.tamil.dailymirror.lk 

கருத்துகள் இல்லை: