புதன், 7 ஜூலை, 2010

முதியவர்களை விஷ ஊசி போட்டு கொன்றுவிடும் கொடூர கிராமங்கள்

முதியவர்களை பராமரிப்பதற்கு பதில் விஷ ஊசி போட்டு கொன்றுவிடும் கொடூர கிராமங்கள்

முதியவர்களை பராமரிப்பதற்கு பதில் விஷ ஊசி போட்டு கொன்றுவிடும்  சம்பவம் விருதுநகர் மாவட்ட கிராமங்களில் நடைபெறுவது தெரியவந்துள்ளது.

76 வயது முதியவர் அவரது மகன் செல்வராஜை அவரது மகன் விஷ ஊசி போட்டு கொன்றுள்ளார்.  
அருப்புக்கோட்டையில் வசித்து வந்த செல்வராஜ்,  சில தினங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்தார்.  முதியவருக்கு சிகிச்சை அளித்து பராமரிக்க வேண்டிய மகன் சந்தானம் அவரை தூக்கி சந்து ஒன்றில் போட்டுள்ளார்.
சில தினங்கள் வரை தண்ணீர், உணவு என்று எதுவும் இல்லாமல் தெருவில் கிடந்தவரை பாத்திமா என்ற பெண்ணைக்கொண்டு விஷ ஊசி போட்டு மகன் சந்தானம் கொன்றுள்ளார்.

தந்தையின் சடலத்தையும் அவசர அவசரமாக தகனம் செய்துவிட்டார்.

காவல்துறை விசாரணையில்,  முதியவர்களை விச ஊசி போட்டு கொன்றுவிடுவது வழக்கமான ஒன்றுதான் என்று
தெரியவந்துள்ளது.  கடந்த 7 வருடங்களாக இப்படித்தான் விருதுநகர் மாவட்டத்தில் நடந்துவருகிறது என்றும் தெரியவந்துள்ளது.

விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் முதியவர்களை வேறு விதத்தில் கொன்று வருவது வழக்கம்.   அதாவது எண்ணெய்
தேய்த்து குளிக்க வைத்து இளநீர் குடிக்க வைத்து ஜன்னி கொள்ளச்செய்து கொன்று விடுவார்கள்.
இப்போது விச ஊசி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. போலீசார் இது பற்றி தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.  

விச ஊசி போட்டு கொன்ற பாத்திமா கைது செய்யப்பட்டுள்ளார்.  அவரிடமும் விசாரணை நடந்துவருகிறது.

கருத்துகள் இல்லை: