கொலல்த்தில் ஆட்கடத்தல் மன்னன் கைது. புலிகளியக்க உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

விசாரணையில், இலங்கையில் புலி தலைவர் பிரபாகரனின் தீவிர ஆதரவாளர் என்பதும், அங்கு நடந்த போரில் சிங்கள வீரர்களின் துப்பாக்கி குண்டு, அவரது காலில் பட்டு காயமடைந்தார் என்பதும் தெரிந்தது.
மேலும், 1990ம் ஆண்டு முதல், 10 ஆண்டுகள் புலிகள் அமைப்பிற்காக பல பணிகளை செய்து வந்துள்ளார். குறிப்பாக, கண்ணிவெடிகளை தயாரித்து பூமிக்கடியில் புதைத்து வைப்பதில் வல்லவர் என்பதும் தெரிந்தது. இவர், 2007ம் ஆண்டு பயணிகள் விசாவில், இலங்கையில் இருந்து விமானத்தில் தமிழகம் வந்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களை இந்தியாவுக்கு கடத்தி வந்து, அவர்களை போலி விசா அல்லது படகுகள் மூலம், ஆஸ்திரேலியா நாட்டுக்கு அனுப்பும் ஏஜன்ட் வேலை செய்து வந்தார். இதற்காக பலரிடம், ஒரு லட்சம் ரூபாய் வீதம் பெற்று வந்துள்ளார். இலங்கையில் இருந்து அனுப்பப்படும் பணம், ராமேஸ்வரத்தில் செயல்படும் வங்கி வழியாக, இவருக்கு கைமாறி வந்தது.
இவரது காலில் குண்டு தாக்கியதால் பாதிக்கப்பட்ட தழும்பு இருப்பதும், போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக