வெள்ளி, 31 ஜூலை, 2020

ரஃபேல் விமான ஊழல் .. இந்த நூற்றாண்டின் மிக மோசமான பட்டவர்த்தனமான ஊழல்!

Karthikeyan Fastura : · ஐரோப்பிய யூனியனின் விண்வெளி நிறு
வனத்தை விட சிறந்த விண்வெளி நிறுவனம் இஸ்ரோ..
கண்டம் விட்டு கண்டம் பாயும் ballistic missile செய்யும் தொழில்நுட்பம் கொண்ட DRDO. பல போர் விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் உருவாக்கும் திறன் வாய்ந்த HAL.
கணினி தொழில்நுட்பத்திற்கு கேட்கவேண்டியதே இல்லை.
இப்படி எல்லாத் திறன்களும், வசதிகளும், வாய்ப்பும் இருந்தும் நாம் ஏன் ரஃபேல் ஜெட் விமானம் வாங்க வேண்டும்?
ரஃபேல்லை விட சிறந்த போர்விமானத்தை கூட நாம் நினைத்தால் கட்டமைக்க முடியும். எல்லாமே எஞ்சினியரிங் வித்தை தான். நாம் தயாரித்து உற்பத்தி செய்வதற்கு நமக்கு தேவையான காலம் இல்லையா..?
போர் அந்த அளவிற்கு உச்சகட்டத்தில் இருக்கிறதா என்ன?
அல்லது போர் பதட்டமாவது உச்சத்தில் இருக்கிறதா..?
அப்படி என்றால் இதன் தேவை என்ன? ஆட்சியாளர்களின் கமிஷன் தொகை. வேறு என்ன இருக்க முடியும். இப்படி யோசிக்கும் போது இதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் கட்சியின் மீதும் கேள்வி எழுகிறது.
ஆனால் அவர்களாவது மார்க்கெட் ரேட்டிற்கு ஒப்பந்தம் போட்டார்கள். பிஜேபி அரசு மார்க்கெட் ரேட்டை விட பல மடங்கு ரேட்டிற்கு வாங்குகிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய பட்டவர்த்தனமான ஊழல்.

60,000 கோடியில் HAL நிறுவனம் 1000 விமானங்களை ரஃபேல் விமானத்தை விட மிக சிறப்பான விமானத்தை உருவாக்கி இருப்பார்கள் என்பது தான் உண்மை. இந்த நூற்றாண்டின் மிக மோசமான பட்டவர்த்தனமான ஊழல் என்றால் அது ரஃபேல் விமான ஊழல் தான்.

ரஃபேல் மட்டுமல்ல இஸ்ரேல் நாட்டுடன் போட்டுக்கொண்ட போர்தளவாட ஒப்பந்தமென்றாலும், அமெரிக்க,ரஸ்யாவுடன் போட்டுக்கொண்ட போர் தளவாட ஒப்பந்தம் என்றாலும் எல்லாமே ஊழல் தான்.

இந்தியா போன்ற நாட்டிற்கு எந்த ஆயுதங்களும் போர்தளவாடங்களும் வெளிநாட்டில் இருந்து வாங்கவேண்டிய அவசியம் இல்லை. நெருக்கடியும் இல்லை

இங்கு இடம், பொருள், காலம், கருவி, எஞ்சினியரிங் படித்துள்ளவர்கள் என்று எல்லாவிதமான திறன்களும் இருக்கிறது. அவை பல்லாயிரம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். இந்திய பொருளாதாரத்திற்கும் வளர்ச்சியை கொண்டுவரும்.

அத்தனையும் விட்டுவிட்டு வெளிநாட்டில் இருந்து தான் வாங்குவேன் என்பதை எப்படி சொல்வது? ஊழலே உன் பெயர் தான் இந்திய அரசாங்கமா?

எப்படி இப்படி ஊழலை வெளிப்படையாக செய்ய முடிகிறது என்று யோசிக்கையில் மக்களை சாதி, மதங்களாக பிரித்துவைத்திருக்கும் போது இதுமட்டுமல்ல எதுவும் சாத்தியம் தான்

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தம்பி போர் வரும் போது உங்ககிட்ட முன்னறிவிப்பு கொடுத்து அனுமதி வாங்கிட்டு வராது. அப்புறம் BASIC PLANES க்கும் FULLY LOADED PLANES க்கும் உள்ள வித்தியாசங்களை தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் வந்து உளறுங்க. நீங்க சொன்ன முத்தான கருத்துக்களை தான் இந்தியாவின் உத்தம புத்திரன் பப்புவும் வருஷக்கணக்கா சொல்லி சொல்லி பல்பு வாங்கிட்டே இருக்காரு.. பப்பு பருப்பே வேகல.. இதுல உங்க பருப்பு எப்படி வேகும்? தண்ணிய குடிங்க.

Unknown சொன்னது…

சீனாக்காரன் தடியிலேயே பேர
அடிச்சி கொல்லும்போது நீங்க கைல எத புடிச்சிட்டு நின்னீங்கடா சங்கி பயல்களா