வியாழன், 30 ஜூலை, 2020

மாணவர்களுக்கு முட்டை, நாப்கின் : அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

மாணவர்களுக்கு முட்டை, நாப்கின் : அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

மின்னம்பலம : ஊரடங்கு காரணமாக வீட்டில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நாப்கின் மற்றும் முட்டை வழங்குவது குறித்து ஏன் பரிசீலிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கொரோனா பரவல் காரணமாக வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாது என்று தமிழக அரசு இன்று அறிவித்தது. இதனிடையே அரசு பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார்.  அதில் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை மக்களுக்கு இலவச முட்டைகள் வழங்கவும், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் ஊரடங்கு காரணமாக வீட்டில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நாப்கின் மற்றும் முட்டை வழங்குவது குறித்து ஏன் பரிசீலிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கொரோனா பரவல் காரணமாக வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாது என்று தமிழக அரசு இன்று அறிவித்தது. இதனிடையே அரசு பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார்.

மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்குச் சத்துணவு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சத்துணவு கூடங்கள் மூடப்பட்டுள்ளது என்றாலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம், குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அரிசி, பருப்பு, முட்டை ஆகியவற்றை அங்கன்வாடி ஊழியர்கள் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி வருகின்றனர். இதன் மூலம் தமிழகத்தில் 33,12, 679 பேர் பயனடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இது மட்டுமின்றி, சத்துணவுத் திட்டம் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான 42 ,61,124 மாணவர்களுக்கு, அரிசி ,பருப்பு உள்ளிட்ட பொருட்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும் வைரஸ் பரவிவரும் நிலையில் மாணவர்களைத் தினமும் பள்ளிக்கு அழைத்து இலவச முட்டைகள் வழங்குவது பாதுகாப்பாக இருக்காது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை விசாரித்த நீதிபதிகள் பள்ளிகள் மூடப்பட்டு, ஆசிரியர்கள் பணியின்றி வீட்டில் இருக்கும் வேளையில் அவர்கள் மூலமாகப் பள்ளி குழந்தைகளுக்கு முட்டைகளை வழங்குவது குறித்து ஏன் பரிசீலிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தினசரி வழங்கப்படாவிட்டாலும் வாரத்தில் ஒருநாள் என்ற அடிப்படையில் மொத்தமாக முட்டைகளை விநியோகிக்கலாம் என்றும் நீதிபதிகள் யோசனை வழங்கினார்.

அதோடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நாப்கின்களை தொடர்ந்து வழங்குவது தொடர்பாகவும் விளக்கம் அளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

-கவிபிரியா

கருத்துகள் இல்லை: