வெள்ளி, 31 ஜூலை, 2020

வனிதா : லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சும்மாவிட மாட்டேன், இனி பஞ்சாயத்து ஷோவை நடத்தக் கூடாது

லட்சுமி ராமகிருஷ்ணன் ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுகிறார் - வனிதா பரபரப்பு புகார்
வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன்
நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் வனிதா பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்தார். இதனால் இருவரும் யூடியூப் சேனல் ஒன்றில் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் லட்சுமி ராமகிருஷ்ணன் பற்றி வனிதா தரக்குறைவாக பேசினார். இதனால் லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதாவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அந்த நோட்டீசை தனது டுவிட்டரில் வெளியிட்டு வனிதா கூறியிருப்பதாவது: நல்ல மனசுள்ள சமூக ஆர்வலர் (லட்சுமி ராமகிருஷ்ணன்) தன் வழக்கறிஞர் மூலம் ரூ. 1.25 கோடி கேட்டு என்னை மிரட்டுவதை பாருங்கள். ஒரு குடும்பத்திற்கு உதவி செய்வது போன்று, தேவையில்லாமல் என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு, போலி நீதிபதியாக இருக்கவும் முயற்சி செய்கிறார். அப்பாவிகளின் ரத்தத்தை குடிக்கிறார்.
இது தொடர்பாக என் தரப்பு வழக்கறிஞர் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளார். இது ஒன்றும் நீதிமன்ற ஆவணமில்லை. அவரது வழக்கறிஞர் பணம் கேட்டு அனுப்பியது தான். எல்லாவற்றையும் சட்டப்படி எதிர்கொள்வேன் என வனிதா கூறியுள்ளார்.

My lawyer is sending her a legal notice on the same...this is not a court document it's only a sophisticated ransom note they lawyers

— Vanitha Vijaykumar (@vanithavijayku1


tamilsamayam .com :  
vanitha
vanitha
வனிதா விஜயகுமார், பீட்டர் பால் திருமணம் குறித்து நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் விமர்சனம் செய்தார். இதை பார்த்த வனிதா லக்ஷ்மி ராமகிருஷ்ணனை விளாசி ட்வீட் போட்டார். இதையடுத்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வனிதாவிடம் மன்னிப்பு கேட்டதுடன் அந்த ட்வீட்டுகளை நீக்கினார்.

அதன் பிறகு பேட்டி ஒன்றில் வனிதா லக்ஷ்மி ராமகிருஷ்ணனை மரியாதை இல்லாமல் வாடி, போடி என்று திட்டியதுடன், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எக்ஸ்போஸ் செய்யப் போவதாக கூறினார். அந்த பேட்டியில் வனிதா பேசிய விதத்தால் ரூ. 1.25 கோடி கேட்டு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நோட்டீஸை பார்த்த வனிதா பார்த்தீங்களா மக்களே, இந்த நல்ல மனசுள்ள சமூக ஆர்வலர் ரூ. 1.25 கோடி கேட்டி மிரட்டுகிறார் என்று ட்வீட் செய்தார். மேலும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்க பதிலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் போவதாக கூறினார். வனிதாவின் ட்வீட்டை பார்த்த சிலர் கூறியதாவது,

லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் அராஜகத்திற்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுத்துவிடக் கூடாது என்று தான் அவர் ஏழைக் குடும்பங்களாக தேர்வு செய்கிறார். நீங்கள் அவரை சும்மா விடாதீர்கள் அக்கா. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் யாரிடமோ ரூ. 1.25 கோடி கடன் வாங்கியிருக்கிறார் போன்று. அதை உங்களிடம் பணம் வாங்கி தீர்த்துவிடலாம் என்று பார்க்கிறார் என்றார்கள்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ரூ. 1.25 கோடி கேட்டி மிரட்டுகிறார்: வனிதா விஜயகுமார்

தன் ஆதராவளர்கள் போட்ட கமெண்ட்டுகளை பார்த்த வனிதாவோ, உண்மை தான். நான் அவரை சும்மாவிடப் போவது இல்லை. அவர் இனி பஞ்சாயத்து நிகழ்ச்சியை நடத்தவே கூடாது என்றார்.
வனிதாவின் ட்வீட்டை பார்த்த அவரின் தீவிர ஆதரவாளர் ஒருவர், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, ரவீந்தர், சூர்யா தேவி, நாஞ்சில் விஜய் உங்களின் கேம் ஓவர் என்றார். அதற்கு வனிதா, அவர்களுக்கு கேமே இல்லை, ஜோக் என்றார்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் ரூ. 5 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்புமாறு வனிதாவிடம் அவரின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். கஸ்தூரி நடத்தும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்,

எனக்கு படுக்கைக்கு செல்வதை விட நிறைய வேலை இருக்கிறது. நான் சினிமாவுக்கு வரும்போதே எனக்கு மெனோபாஸ் ஆகிவிட்டது. இவ என்ன பேசிக்கிட்டு இருக்கா. என்ன நினைச்சிக்கிட்டு இருக்கா மனசுல. எல்லா பெண்களும் அவள மாதிரி இருப்பாங்களா.

இது எலிசபெத்தோட பிரச்சனை மட்டும் இல்லை. என் புருஷன் மட்டும் இப்படி ஏதாவது செய்திருந்தால் நான் நேராக போய் வெட்டியிருப்பேன். வெட்டிட்டு ஜெயிலுக்கு போயிருப்பேன். இப்படி டிவி முன்னாடி உட்கார்ந்து கொஞ்சிக்கிட்டு இருக்காங்க. அதை பார்த்து எலிசெபத் எவ்வளவு கஷ்டப்படுவார். வனிதாவுக்கு கம்பானியன்ஷிப் என்பதன் அர்த்தமே தெரியவில்லை. செக்ஸ் தான் தேவை என்றால், கக்கூஸுக்கு போவது போன்று இதுக்கு மட்டும் போவது என்றால் எனக்கு கம்பானியன் வேண்டாம். வாய்ல வருது எனக்கு. நான் ரொம்ப பொறுமையாக இருந்தேன். ஆனால் தற்போது பொறுமை போய்விட்டது என்றார்.

கஸ்தூரியின் பேட்டியில் பேசியதற்காகத் தான் லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்

கருத்துகள் இல்லை: