வெள்ளி, 31 ஜூலை, 2020

நடிகர் அனில் முராரி உயிரிழப்பு..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

சத்தியம் டிவி : சின்னத்திரை மூலம் நடிப்புலகில் அறிமுகமானவர் நடிகர் அனில் முர
ளி. கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், கன்னியாகுமரியில் ஒரு கவிதா என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தனது பயணத்தை தொடங்கினார். இதையடுத்து, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என்று பல்வேறு படங்களில் நடித்த அனில்  முரளி, மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழி சினிமாக்களிலும் நடித்திருக்கிறார்.
தமிழில் கடைசியாக வால்டர் படத்தில் நடித்த இவர், கடந்த சில தினங்களாக கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பிற்கு பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை: