ஞாயிறு, 12 நவம்பர், 2017

ராஜீவ் காந்தியை தாக்கியவருக்கு தேர்தல் டிக்கெட் கொடுத்த ராஜபக்ஷ கட்சி

Sarawanan Komathi Nadarasa : மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்து வரும் மகிந்த அணிக் கட்சியான “பொது ஜன பெரமுன” கட்சியில் 1987 முன்னால் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மண்டையைப் பிளந்த விஜித ரோகன விஜேமுனிக்கு இன்று அங்கத்துவம் கொடுத்தார் பசில் ராஜபக்ச.
ராஜீவ் மீதான தாக்குதலால் இன்றும் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு வீரனாக கருதப்படுபவர் விஜேமுனி. அது மட்டுமன்றி விஜெமுனியின் அரசியல் முதலீடே அந்த சம்பவம் தான். 2015 பொதுத் தேர்தலில் போட்டியிட்டபோது விஜெமுனியின் போஸ்டர்கள் அதை உங்களுக்கு உறுதி செய்யும்

கருத்துகள் இல்லை: