ஞாயிறு, 12 நவம்பர், 2017

பிரகாஷ் ராஜ் : நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு பேரழிவு!


tamilthehindu :நடிகர்கள் அரசிலுக்கு வருகை தருவது நாட்டுக்கு பேரழிவு என்று பிரகாஷ் ராஜ் கூறியது சர்ச்சைக்குள்ளான நிலையில் தான் கூறியதன் அர்த்தம் என்னவென்பதை விளக்கியுள்ளார் பிரகாஷ் ராஜ்.
இது குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்த பிரகாஷ் ராஜ், எப்படி திரித்து விட்டார்கள் என்று பாருங்கள், நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் நான் கூறியது இதுதான்:
நடிகர்கள் தாங்கள் பிரபலமானவர்களாக இருப்பதாலேயே அரசியலுக்கு வருதல் கூடாது. இது பேரழிவு.
நாட்டை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த தெளிவான பார்வையுடன் மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும். நாம் ரசிகர்களாக வாக்களிக்கக் கூடாது, மாறாக பொறுப்புள்ள குடிமக்களாக வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார் பிரகாஷ் ராஜ்

கருத்துகள் இல்லை: