வியாழன், 28 செப்டம்பர், 2017

சு.சாமி :பாகிஸ்தானை நான்காக பிரிக்கவேண்டும்! பாகிஸ்தானை மட்டுமா ? நல்லா யோசிச்சு பாருங்க.....

பாகிஸ்தானை நான்காக பிரிக்கவேண்டும்!பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக பிரிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
எல்லைப்பாதுகாப்பு படையில் பணியாற்றிவந்த ரம்ஸான் அகமது பாரே என்பவர், விடுப்பு எடுத்து கொண்டு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தின் ஹஜின் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். நேற்றிரவு, அவர் வீட்டில் இருக்கும் போது சில தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ரமீஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த தாக்குதலில் அவர் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.< இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, “அழுது புலம்பி எந்த பிரயோஜனமும் இல்லை. முன்னதாக, பாகிஸ்தானை இரண்டு துண்டுகளாக நாம் பிரிப்பதாக இருந்தோம். இப்போது, நான்கு துண்டுகளாக பிரிக்கும் நேரம் வந்துவிட்டது” என்று அவர் தெரிவித்தார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: