திங்கள், 25 செப்டம்பர், 2017

பன்னீர் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்களை நீக்க கோரி திமுக வழக்கு

திமுக கொறடா சக்கரபாணி இன்று சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 11 பேர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. நாளை மறுநாள்(27.9.2017) இதன் மீதான விசாரணை நடைபெறுகிறது. நக்கீரன்

கருத்துகள் இல்லை: