செவ்வாய், 26 செப்டம்பர், 2017

மாணவர்களுக்கு அலகு குத்தியவர்கள் மீது மனித உரிமை ஆணையம் கேள்வி! ஜெயலலிதா குணமடைய ...

ஜெயலலிதா குணமடைய வேண்டி மாணவர்களுக்கு வலுக்கட்டாயமாக அலகு குத்தப்பட்டதாக எழுந்த புகார் குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஜெயலலிதாவுக்காக மாணவர்களுக்கு அலகு குத்தியதாக புகார்: தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் சென்னை: ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் குணமடைய வேண்டி தொண்டர்கள் கோவில் கோவிலாக சென்று பிரார்த்தனை செய்தனர். சிறப்பு வழிபாடு, அலகு குத்துதல் என பல்வேறு வகையில் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
அவ்வகையில் சென்னை ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவுக்காக கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி 20 மாணவர்களின் கன்னங்களில் அலகு குத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து 4 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்து கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் சென்னை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.  மாலைமலர்


கருத்துகள் இல்லை: