சனி, 2 ஏப்ரல், 2016

குவாரிகளில் சகாயம் கண்டு பிடிச்ச எலும்பு கூடு.....எல்லாம் நீதி தேவதையின்....போலி டாக்டர்கள் மாதிரி போலி நீதிபதிகளும்?

1---,கணித மேதை குமாரசாமி மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
2--- மகேந்திரபூபதிக்கு ஒரு எலும்பு துண்டை வீசியிருப்பார்கள். அதான் வாலாட்டியிருக்கிறார்.
3-- மகேந்திர பூபதியை சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது. அவரைத் தகுதி நீக்கமும் செய்யவேண்டும். 4--புதுக்கோட்டையை சேர்ந்த விளையாட்டு வீராங்கனை சாந்தி இயற்கையாக பால் மாற்றம் அடைந்ததற்கு அவருக்கு கிடைத்த (அது சாந்தியுடைய தவறே இல்லை என்ற பொழுதும்) பதக்கம் பறிக்கப்பட்டது. அப்படி இருக்கையில் இது போன்ற புல்லுருவிகளின் தகுதியை ஏன் அரசும், நீதித்துறையும் ரத்து செய்யக்கூடாது?
5-- பொய்யான ஆதாரங்களை சமர்ப்பித்த குற்றத்திற்காக அன்சுல் மிஸ்ரா, உடந்தையாக இருந்த அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஞானகிரி, ஷீலா மீது குற்ற வழக்கு தாக்கல் செய்ய அரசிடம் முன் அனுமதி பெற உத்தரவிடுகிறேன்" - இதுதான் உச்சகட்ட காமடி... இது போன்ற நிதிபதிகளை டிஸ்மிஸ் செய்யவேண்டும்... நீதித்துறைக்கே அவமானம் இது போன்ற மட்டைகள்...
6-- கிரானைட் முறைகேடு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையை ஜெயாவுக்கு சகாயம் அனுப்பிய போது, அந்த அறிக்கையை 6 மாதம் கிடப்பில் போட்டு வைத்து இருந்தார் ஜெயா...........
.இதனால் விவகாரம் வெடிக்க அப்புறம் தான் சகாயத்தை தூக்கி வேறு துறைக்கு வீசி அடித்தார்...அதே போன்று சகாயத்திற்கு பிறகு அன்சுல் மிஸ்ரா இந்த வழக்கை விசாரித்தார் அவரின் மீதே குற்றத்தை சுமத்தி இந்த நீதிபதி (?) அவரின் மீது கேஸ் பதிய உத்தரவிட்டு இருக்கிறார்...இவர் உண்மையில் நீதிபதியா இல்லை போலி டாக்டர் மாதிரி போலி நீதிபதியா........இவர் கோடி கணக்கில் பணம் வாங்கினாரா இல்லை குடும்பத்தினரை கடத்தி வைத்து கொண்டு இப்படி தீர்ப்பு கொடுக்க சொன்னார்களா தெரியவில்லை.............
7-- இதில் சட்ட விரோதமாக கிரானைட் எடுத்தது மட்டும் கிடையாது...அந்த குவாரிகளில் பல நரபலிகள் கொடுக்கப்பட்டுள்ளன.........அதனை கருத்தில் கொள்ளாமல் மறைத்து பழனிசாமியை விடுதலை செய்து தீர்ப்பு கூறிய அந்த நீதிபதியை பாருங்கள் கொஞ்சம், நத்தம் விஸ்வநாதன் உடன்பிறப்பு போன்றே தோன்றுகிறது............மக்களின் கருத்துக்கள் சிலவற்றை தந்திருக்கிறோம்   இனி முழு விபரத்தையும் படியுங்கள்

தினமலர்.comமதுரை: கிரானைட் குவாரி முறைகேடு வழக்குகளை விசாரித்து வந்த, மதுரை மாவட்டம், மேலுார் குற்றவியல் நீதித்துறை மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி, நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். கிரானைட் தொழிலதிபரை விடுதலை செய்து, மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி பிறப்பித்த உத்தரவு குறித்து, நேரில் விசாரணை நடத்திய பின், உயர் நீதிமன்ற பதிவுத்துறை, இதற்கான உத்தரவை பிறப்பித்தது.

மதுரை, மேலுார் பகுதியில், கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டதாக, பி.ஆர்.பி., உட்பட பல நிறுவனங்கள் மீது மேலுார், ஒத்தக்கடை, கீழவளவு போலீஸ் நிலையங்களில், 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இந்த கிரானைட் வழக்குகள் விசாரணை தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஏற்கனவே சில வழிகாட்டுதலுடன், கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், இரண்டு வழக்குகளில், பி.ஆர்.பி., நிறுவன அதிபர், பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார், திருப்புத்துார் சகாதேவன் ஆகியோரை விடுதலை செய்து, மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி, மார்ச், 29ல் உத்தரவிட்டார். இது, பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதியிடம், மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பஷீர்அகமது, தலைமை குற்றவியல் நடுவர் சரவணன் நேரில் விசாரணை நடத்தினர். இரண்டு வழக்குகளில் பிறப்பித்த உத்தரவு மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதன்பின், உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை அனுப்பினர்.

அதைத்தொடர்ந்து, மகேந்திர பூபதியை, சஸ்பெண்ட் செய்து, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் கலையரசன், உத்தரவு பிறப்பித்தார். நேற்று காலை, 10:30 மணிக்கு, மேலுார் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி, வழக்கம் போல நீதிமன்ற பணிகளை துவக்கினார். காலை, 11:15 மணிக்கு, மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பஷீர் அகமது, தலைமை குற்றவியல் நீதிபதி சரவணன், விரைவு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா, மேலுார் நீதிமன்றம் சென்றனர். சஸ்பெண்ட் உத்தரவை மகேந்திர பூபதியிடம் அளித்தனர். மேலுார் நடுவராக, கூடுதல் பொறுப்பை பாரதிராஜா ஏற்றார்.

ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைகளுக்கு ஆளான மகேந்திர பூபதி: ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைகளுக்கு ஆளானவர் மகேந்திர
பூபதி என, தகவல்கள் வெளியாகி உள்ளன. பி.ஆர்.பி., நிறுவனம் உட்பட, பல நிறுவனங்கள் மீது தொடரப்பட்ட கிரானைட் முறைகேடு வழக்குகளில், மூன்று வழக்குகள் தொடர்பான குற்றப் பத்திரிகைகளில், கிரானைட்உரிமையாளர்கள் மீது, திருட்டு குற்றச்சாட்டை மட்டும் விசாரணைக்கு ஏற்று, கனிமவளச் சட்டம், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை தடுக்கும் சட்டம், வன்கொடுமைச் சட்டம் உட்பட, பல பிரிவுகளின் கீழான குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு ஏற்க, மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி மறுத்தார்.இதையடுத்து, போலீஸ் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுக்களை, விசாரணைக்கு ஏற்க வேண்டும்' என, உத்தரவிட்டது. 'இந்த உத்தரவை மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி நிறைவேற்றவில்லை' என்றும், உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான மனுவை விசாரித்த, உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ், 'துாங்குபவர்களை எழுப்பலாம்; துாங்குவது போல் பாவனை செய்வோரை எழுப்ப முடியாது. மேலுார் மாஜிஸ்திரேட், இரண்-டா-வது வகையைச் சேர்ந்தவர். குற்றப்பத்திரிகையில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும், விசாரணைக்கு எடுக்க வேண்டும். மாஜிஸ்திரேட் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறேன்' என, உத்தரவிட்டார்.

சர்ச்சைக்குள்ளான மாஜிஸ்திரேட்:
மகேந்திர பூபதி, 45, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடுவைச் சேர்ந்தவர். மதுரை சட்ட கல்லுாரியில், பி.எல்., முடித்தார். ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் செய்தார். சிவில் நீதிபதி பணிக்கான தேர்வில்வெற்றி பெற்று, ஒன்பது
Advertisement
ஆண்டுகளுக்கு முன், மாஜிஸ்திரேட் பொறுப்பை ஏற்றார். கன்னியாகுமரி, தக்கலை, சிவகங்கை, இளையான்குடியில் பணிபுரிந்துள்ளார். 2013 மே மாதம், மேலுாரில் பொறுப்பேற்றார். மகேந்திர பூபதி குறித்து, தொடர்ந்து உயர் நீதிமன்றத்திற்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன. இவரது மனைவி ஆசிரியை. மகேந்திர பூபதியின் சகோதரரும் மாஜிஸ்திரேட்டாக உள்ளார். கிரானைட் வழக்குகளில், துவக்கத்தில் இருந்தே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக இவர் செயல்பட்டதாகவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னும், விசா-ர-ணைக்கு எடுக்காமல், காலம் தாழ்த்தி வந்ததாகவும், சர்ச்சைகள் எழுந்தன.

மாஜிஸ்திரேட் உத்தரவு என்ன?
பி.ஆர்.பி., உட்பட, மூன்று பேரை விடுதலை செய்து, மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி, மார்ச், 29ல் பிறப்பித்த உத்தரவு:கிரானைட் முறைகேடு மேல்முறையீட்டு வழக்குகளில், உயர்நீதிமன்ற கிளையின், இரு தனி நீதிபதிகளின் உத்தரவுகள் வேறுபட்டதாக இருந்தது.மூன்று வழக்குகளில், ஒரு விதமாகவும், 40 வழக்குகளில் ஒரு விதமாகவும், இந்நீதிமன்றம் வழக்குகளை விசாரணைக்கு எடுக்காத நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் வேறுபாட்டினை ஆராய இயலாது.கீழமை நீதிமன்றம் தன் முன்னுள்ள ஆவணங்கள் அடிப்படையில் செயல்பட முடியும். அச்செயலானது, 'சட்டம் அறிந்தவர் துாங்குவது போல் நடிப்பவராக உள்ளார்' என்று காட்டும் நிலையில், உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி சி.டி.செல்வத்தின் தீர்ப்பை மறைத்து, இந்நீதிமன்றத்திற்கு அரசு தரப்பு களங்கம் ஏற்படுத்தியுள்ளது.எதிரிகள் மீதான குற்றச்சாட்டிற்கு, கலெக்டர் அபராதம் மட்டும் விதிக்கலாம். மனுவை மதுரை கலெக்டர் தாக்கல் செய்வதற்கு பதில், 'நான் தான் கலெக்டர்' என, அன்சுல் மிஸ்ரா தாக்கல் செய்துள்ளார்.இதனால் எதிரிகளை வழக்கில் இருந்து விடுதலை செய்கிறேன். பொய்யான ஆதாரங்களை சமர்ப்பித்த குற்றத்திற்காக அன்சுல் மிஸ்ரா, உடந்தையாக இருந்த அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஞானகிரி, ஷீலா மீது குற்ற வழக்கு தாக்கல் செய்ய அரசிடம் முன் அனுமதி பெற உத்தரவிடுகிறேன் இவ்வாறு, அந்த உத்தரவில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: