வெள்ளி, 1 ஏப்ரல், 2016

பிரேமலதா : ஓடாதீங்க ஓடாதீங்க நமக்கு நல்ல காலம் வருது....நல்லா கவனிப்போமுங்க.

தே.மு.தி.க.,வை கரைக்கும் வேலைகளை, தி.மு.க., துவக்கி உள்ளதால், விஜயகாந்த் மனைவி பிரேமலதா அலறத் துவங்கியுள்ளார்.சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க தி.மு.க., விரும்பியது. தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பலரும், இதே மனநிலையில் இருந்தனர். ஆனாலும், திடீரென மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து, தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை தே.மு.தி.க., செய்துள்ளது. யக்காவ் முதல்ல நாவடக்கம் தேவை....கொஞ்சம் கூட மருவாதை தெரியல்ல....  என்னமோ கண்ணகி பரம்பரையில் வந்தது போல் நேற்று வீர வசனம் எல்லாம் பேசீனீக.இன்று தொண்டர்களும் ம. செ இக்களும் அடுத்த கட்சிக்கு ஓடுகிறான் என்றதும் கண்ணீரும் கம்பலையுமாய் நிக்கிரீங்க  கணவன்தான் குடிகாரன். ஆனா நீங்க அதுக்கும்   மேல்  போல் தெரிகிறது,
தே.மு.தி.க., நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   
அதனால், அவர்கள் கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க.,- - தி.மு.க.,வில் சேரும் பேச்சுக்களை துவக்கியுள்ளனர்.
வட சென்னை மாவட்ட தே.மு.தி.க., செயலர் யுவராஜ், சேலம் மாவட்ட நிர்வாகிகள் பலரும், நேற்று முன்தினம் தி.மு.க.,வில் இணைந்தனர். இது, விஜயகாந்தை விட, அவரது மனைவி பிரேமலதாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, தே.மு.தி.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:தற்போது தீவிர பிரசார சுற்றுப் பயணத்தில் இருக்கும் பிரேமலதா, ஆங்காங்கே கட்சியினரை சந்திக்கிறார். தொகுதி நிலவரம்; கட்சிக்கு உள்ள செல்வாக்கு பற்றி எல்லாம் கட்சியினரிடம் கேட்டு முடித்ததும், கட்சியில் இருந்து மாற்று முகாமுக்கு மாறத் திட்டமிட்டுள்ளவர்கள் குறித்து கேட்கிறார்.

அந்த விவரங்களை தெரிந்ததும், மாறத் துடிப்பவர் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்தால், அவரை தனியாக அழைத்து பேசுகிறார். அப்போது, கட்சியில் இதுவரை அவர் செய்த பணிகள் குறித்தெல்லாம் பேசும் அவர், 'உழைப்பை வீணடித்து விட வேண்டாம். விஜயகாந்த் அணி - மக்கள் நலக் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்; ஆட்சிக்கு வரும்.

அப்போது, உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிட்டும். அதனால், அவசரப்பட்டு முகாம் மாறும் முயற்சிகளை எடுக்க வேண்டாம். நான் தான், இந்த கட்சியின் காவல் தெய்வம்; உங்களையெல்லாம் காக்க வேண்டியது என் கடமை' என, உருக்கமாக பேசுகிறாராம். இதை திண்டுக்கல் கூட்டத்திலும், அவர் வெளிப்படையாக பேசியிருக்கிறார். ஆனாலும், அதை கட்சியினர் ஏற்பரா என, தெரியவில்லை.இவ்வாறு அக்கட்சி நிர்வாகிகள் கூறினர். - -நமது சிறப்பு நிருபர் --  dinamalar.com

கருத்துகள் இல்லை: