புதன், 30 மார்ச், 2016

அந்த 1,500 கோடி ரூபாய் டவுட்...கொதிக்கும் வைகோ.....வாழ்க்கை முழுவதும் பிறர்மீது சேற்றை வாரி வீசிய......

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: அ.தி.மு.க.,விடம், 1,500 கோடி ரூபாய் வாங்கியதாக, என் மீது, தி.மு.க.,வினர் திட்டமிட்டு வதந்தியை பரப்பி வருகின்றனர்.
டவுட் தனபாலு: விஜயகாந்துக்கு, 500 கோடி ரூபாய் கொடுக்க, தி.மு.க., முன்வந்ததுன்னு நீங்க சொன்னால், கண்ணை மூடிக்கிட்டு அதை மக்கள் நம்பணும்... இதுவே உங்க மீதுன்னா, இப்படிக் கொதிப்பீங்களா... அடுத்தவங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னி, தனக்கு வந்தால் ரத்தம்கறது இதுதானோ என்பது தான், தமிழக மக்களின், 'டவுட்!' தினமலர்.com வைகோவின் மிகப்பெரிய அதிஷ்டம் இன்னும் பலர் சரியாக வாயை திறக்காததுதான்.இவர்மீது உள்ளபடி  சரித்திர உண்மைகளை கூறாமல் சம்பந்தப்பட்டவர்கள் ஏனோ மௌனமாகி விட்டனர். கிளறினால்  பெரும் விமர்சனத்தை எதிர்கொள்ளவேண்டி வரும்  மிஸ்டர் வைகோ அவர்களே! 

கருத்துகள் இல்லை: