வெள்ளி, 1 ஏப்ரல், 2016

நீதிபதி மகேந்திர பூபதி இடைநீக்கம் பி.ஆர்.பிக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததால்....குமாரசாமிய கண்டுக்கல இவன்மட்டும் என்ன பாவம் செய்தான்?

Tamil.BBC ::மதுரை மாவட்டம் மேலூரில், கிரானைட் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக நீதிபதி கே.வி. மகேந்திர பூபதியை சென்னை உயர் நீதிமன்றம் இடைநீக்கம் செய்திருக்கிறது.t; கிரானைட் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்து நீதிபதி மகேந்திரபூபதி உத்தரவிட்டிருந்தார். இதற்கான உத்தரவை உயர்நீதிமன்றப் பதிவாளர் அனுப்பியிருக்கிறார். அவருக்குப் பதிலாக பாரதிராஜா என்பவர் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கிரானைட் வெட்டியெடுக்கப்பட்டது தொடர்பான வழக்கில் நீதிபதி மகேந்திர பூபதி தவறாகச் செயல்படுவதாகக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கோ, ஒழுங்கு நடவடிக்கையோ எடுக்கும்படி கூறி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் நீதிபதி பி.என். பிரகாஷ் கடந்த மார்ச் 24ஆம் தேதியன்று கூறினார்.

இதற்கிடையில், கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின் உரிமையாளர் பழனிச்சாமி, சகாதேவன் ஆகியோரை விடுவித்து மார்ச் 29ஆம் தேதியன்று மகேந்திரபூபதி உத்தரவிட்டார்.
மேலும் மதுரை மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் அன்ஷுல் மிஸ்ரா, கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் ஆர். ஷீலா, அருணகிரி ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
மகேந்திரபூபதியின் இந்தத் தீர்ப்பு நீதித்துறை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், வியாழக்கிழமையன்று மாவட்ட முன்மை நீதிபதி ஏ.எம். பஷீர் அகமதுவும் தலைமை மாஜிஸ்ட்ரேட் பி சரவணனும் மேலூர் நீதிமன்றத்திற்கு திடீரென வருகைதந்தனர்.
அங்கு நடந்த சோதனையையடுத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலுக்கு அவர்கள் அறிக்கை ஒன்றை அனுப்பினர். அதற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: