சனி, 17 ஜூலை, 2010

பணிப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நீதிபதி மீது

நீதிபதியொருவர் கொழும்பிலுள்ள தனது வீட்டில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய நுவரெலியாவைச் சேர்ந்த யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸ் திணைக்கத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவில் புகார் செய்யப்பட்டுள்ளது.

எனினும், இப்புகார் குறித்து விசாரணை செய்யப்படாத நிலையில் குறித்த வீட்டிலிருந்து அந்த யுவதி தப்பிச் சென்றுள்ளார்.

மேற்படி யுவதியை பரிசோதித்த சட்டவைத்திய அதிகாரி, அந்த யுவதி உடல் மற்றும் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  இத்துஷ்பிரயோகம் குறித்து யுவதியின் சகோதரரினால் நுவரெலியா பொலிஸ் நிலையத்திலும் புகாரிடப்பட்டுள்ளது.


(-லங்காதீப இணையத்தளம்)

கருத்துகள் இல்லை: