வெள்ளி, 16 ஜூலை, 2010

மட்டக்களப்பு கைதிகளுக்கு நூலகமும்,தகவல் தொழில் நுட்ப பிரிவும் திறந்து வைக்கப்பட்டது!

முதன் முறையாக மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளின் தகவல் தொழில் நுட்ப அறிவையும், வாசிப்புத்திறனையும் அதிகரிக்க இன்று தகவல் தொழில் நுட்ப பிரிவும், நூலகமும் திறந்து வைக்கப்பட்டது.வேல்ட் விசன் நிறுவனம் வழங்கிய கணணிகள், மற்றும் நூல்களைக் கொண்டு இந்நிலையம் திறக்கப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிறி பண்டார தெரிவித்தார்.

வேல்ட் விசன் நிறுவன மாவட்ட முகாமையாளர் எஸ்.பிரேமச்சந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்நிலையத்தை திறந்து வைத்தார்.

கருத்துகள் இல்லை: