சனி, 17 ஜூலை, 2010

ஷீரடி சாய்பாபா கோயிலில் ஸ்டாலின் மனைவி: எளிமைக்கு பக்தர்கள் பாராட்டு

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா பங்கேற்றார். விழாவில் பங்கேற்ற அவர் பாபாவின் அரிய அற்புத விஷயங்களை ஆர்வமுடன் கேட்டறிந்தார். 50 ஆண்டுகள் பழமையானது மயிலை ஷீரடி சாய்பாபா கோயில். பாபாவின் பக்தரான நரசிங்கசுவாமிகள் இந்த கோயிலை நிர்வகித்தார்.

நாடி வரும் பக்தர்கள் : இந்த கோயிலின் தனிச்சிறப்பு என்னவெனில் மற்ற கோயில்கள் போல் அல்லாமல் பாபாவின் அருகில் சென்று வழிபட முடியும். பளிங்கு சிலையாக உருவம் கொண்ட இந்த சுவாமிக்கு பட்டாடைகள் போர்த்தி பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். இந்த கோயிலில் நாள்தோறும் பக்தர்கள் வருகை பெரும் அளவில் இருக்கும். இங்கு கடந்த சில நாட்களாக புனரமைப்பு பணி நடந்தது. புதிய கோபுரம் கம்பீரமாக எழுப்பி கும்பாபிஷேகம் விழா 5 நாட்களாக கொண்டாடப்பட்டது. 5ம் நாளில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி யாகசாலை பூஜை, சிறப்பு பஜனை ஆகியன நடந்தன. மாலையில் ஷீரடி சாய்பாபாவின் வீதி உலா நடந்தது.

துணை முதல்வர் ஸ்டாலின் மனைவியின் எளிமை : இந்த இனிய விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா பங்கேற்றார். இவர் ஷீரடி சாய்பாபாவின் தீவிர பக்தை ஆவார். கும்பாபிஷேகம் முடிந்து சீரடி சாய்பாபாவுக்கு நடந்த அபிஷேகத்தை நேரில் நின்று பார்த்தார். ஒரு மணி நேரம் காத்திருந்து, பிரசாதங்களை பக்தர்களோடு , பக்தராக பெற்றுக்கொண்டார். துணை முதல்வர் மனைவி என்பதை காட்டிக்கொள்ளவில்லை.

பாதுகாப்பு கெடுபிடிகள் எதுவும் இல்லை. இதனால் ஏனைய பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். யாருக்கும் இடையூறும் இல்லாமல் பொறுமையாக பக்தர்களோடு நின்று வணங்கியதை அங்கு வந்திருந்த பக்தர்கள் கனிவுடன் பார்த்தனர். துணை முதல்வர் மனைவி துர்காவின் எளிமையை அங்கு இருந்த பக்தர்கள் வியந்து பாராட்டினர். சாய்பாபாவின் அற்புதங்களை பெண் ஒருவர் கூறுவதை, ஆர்வமுடன் கேட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

உரிய பலன் உண்டு : இந்த கோயிலை பொறுத்தவரை சாதி, மதம் பாராமல் எல்லா பிரமுகர்களும் இங்கு வந்து செல்வதாக ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தெரிவித்தார். இங்கு நம்பிக்கையுடன் வரும் பக்தர்களுக்கு உரிய பலன் கிடைப்பதை தாம் கண்கூடாக பார்த்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ரமேஷ் - chennai,இந்தியா
2010-07-16 20:34:53 IST
ஒரு துணை முதல்வரின் மனைவியின் எளிமையைப் பற்றி செய்தி வெளியிட்டு இருப்பதை பாராட்ட மனமில்லாதவர்கள் தினமலர் ஜால்ரா என்கிறார்கள். இவர்களுக்கு முன்னாள் முதல்வரின் உ.பி. சகோதரி பற்றிய தகவல்கள் தேனாக இனிக்கும். பகுத்தறிவு என்பது மற்றவர்களின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது, அது இங்கே வெளிப்பட்டிருக்கிறது. அரைகுறையாக விஷயங்களைத் தெரிந்து கொண்டவர்களுக்கு இந்த செய்தி வயிற்றெரிச்சலை ஏற்படுத்துவதில் ஆச்சரியம் என்ன?...
sundar - palay,இந்தியா
2010-07-16 20:32:56 IST
ஏன் ivvalavu முக்கியத்துவம்?... 
இளச்சவாயன் - gujarat,இந்தியா
2010-07-16 17:55:54 IST
அட போங்கைய, இவன்னுங்க திராவிட மக்கள் இழுன்னு சொல்லி கோயில் க்கு போவானுங்க. அப்போ நம்ள இங்கிலீஷ் ம்,ஹிந்தி யும் படிக்கச் உடல (கருணாநிதி,ராமதாஸ் இவங்க எல்லாம் நம்மள நல்லா முட்டாள் அக்குராங்க.)நாமலும் அறிவு இல்லாம அவனுக சொல்லுறத கேக்குறோம்.ஆனால் நான் ஒரு திராவிடன்.... 
K Raghu - Dehradun,இந்தியா
2010-07-16 17:00:31 IST
வீட்டுக்கு ஒன்று நாட்டுக்கு ஒன்று. பேரனின் கம்பெனியின் பெயர் ரெட் ஜயன்ட் (ஆங்கிலத்தில்). மருமகள் சாய்பாபா பக்தை. உபதேசிப்பதோ நாஸ்திகம், எங்கும் தமிழ் அண்ட் எதிலும் தமிழ். மக்களே விழித்தெழுங்கள். தட்டி கேளுங்கள்....
RAAJIV - chennai,இந்தியா
2010-07-16 16:54:31 IST
என்ன கொடும சார் ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் அவன் கடமையை கடமையே என்று செய்வான்...
ச.பூவராஹன் - Chennai,இந்தியா
2010-07-16 16:54:13 IST
அந்த குடும்பமே ஒரு கொள்ளைகார குடும்பம்! இதுல்ல அந்த அம்மாவுக்கு தனி பெட்டி செய்தி வேற! மதுரை குடும்பமும் தான் தீவிர பக்தர்கள் என்பது நாடறிந்த விஷயம்! ஸ்டாலினும்தான் எதோ மாதா சர்ச்சுக்கு போனாராம்! மொதல்ல திரு மு க வோட குடும்பம் அவரு பேச்சை கேக்கட்டம்! அப்புறம் நாம கேப்போம்! ஆனா திருமதி ஸ்டாலின் அவர்கள் மிகுந்த நல்லவர் என்பதும், அவரின் புண்ணியமே அவரின் குடும்பத்தை காக்கிறது என்பதும் நாம் அறிந்தததே! இதே ஸ்டாலின் ஸ்ரீரங்க கோபுரத்தை தகர்க்க வேண்டும் என்று முழங்கியதையும், அவரின் தற்போதய நிகழ்வையும் பார்க்கும் போது, ஓட்டிற்காக என்ன வேண்டுமானாலும் பேசும் அவர் தந்தையின் குணமே தெரிகிறது! அனால் அண்ணன் அஞ்சா நெஞ்சரின் அடாவடிக்கு முன்னால் தளபதி பாவம் தான்! மஞ்சத்துண்டு ஆசியாவின் 5 பெரிய பணக்கார குடும்பங்களில் ஒன்று என்பதும்! அந்த பணம் எல்லாம் நம்முடையது என்பதையும் நாம் மறக்க கூடாது! மறக்க முடியாது!... 
சிவா - Chennai,இந்தியா
2010-07-16 15:57:15 IST
எங்கபா போச்சு உங்க திராவிட கொள்கை? ஊருக்கு தன உபதேசமா? அது சரி, தினமலர் கொள்கை மாறிகிட்டே வர மாதிரி இருக்கே....
SOUNDAR - singapore,இந்தியா
2010-07-16 15:39:27 IST
தினமலர் இப்போ தி.மு.க. பேப்பர்...
ச.மணி - vallanadu,இந்தியா
2010-07-16 14:34:19 IST
இதுதான் உண்மை. மாமனாரின் கொள்கை மருமகளுக்கே பிடிக்கலை. மக்களுக்கு பிடிக்குமா என்ன. அதான் ஏற்கனவே முனா கனா செம்மொழி மாநாட்டில் சொல்லி விட்டாரே- தமிழை நான் ஆயுதமா எடுத்ததால் தான் எனக்கு வெற்றி கிடைச்சதுன்னு. அப்ப அவர் வெற்றிதான் அவருக்கு முக்கியம். மக்களோ, கொள்கையோ அல்ல. இதை ஸ்டாலின் நல்ல (உண்மையான தமிழ் பண்பாட்டை) புரிந்துகொண்டதால்தான் துர்காம்மா கோயில் வராங்க. திராவிடம் என்பது நாத்திகம் பேசுவது அல்ல....
வேலுமணி - coimbatore,இந்தியா
2010-07-16 14:29:52 IST
நானும் என் குடும்பத்தாரும் சாய் பாபா பக்தர்கள். எனவே, சாய் பாபாவோட ஆசி அனைவருக்கும் கிடைக்கட்டும். என்றும் சாய்பாபா பக்தன் வேலுமணி, வேணி, வே.சாய் விக்னேஷ், வே.சத்யப்ரியதர்ஷினி....
பகுத்தறிவு பாசறை கருணாநிதி - GopalapuramCITColonyandotherplaces........,இந்தியா
2010-07-16 14:12:58 IST
என் உடன்பிறப்பே, நான் என்றும் பெரியாரின் கொள்கையில் அடி மாறாதவன் என்பதற்கு மற்றும் ஒரு சான்று இந்த செய்தி. என் இனமே, என் இதயமே நாம் எந்த வழியில் சென்றாலும் அதை நம் வீட்டு பெண்களின் மீது திணிக்கக்கூடாது என்ற சிந்தனையில் நான் மிகுந்த கவனத்துடன் இருப்பவன், அதே போல் தான் எனது தனயனும் இருக்கிறான். நாம் பகுத்தறிவு பாசறையாக இருந்தாலும் கடவுள் இல்லை என்றாலும், நம் அடுத்தவர்களது சுதந்திரத்தில் தலை இடுவது தவறு என்று பெரியாரும் அண்ணாவும் என்னிடம் சத்தியம் வாங்கிவுள்ளனர். ஆகையால் தான் நாங்கள் பெண்ணை அடிமையாக்காமல் அவர்களுக்கு இட ஒதுக்கீடும் சுதந்திரமும் சுயமாக எதையும் செய்யும் தைரியத்தையும் கொடுத்துள்ளோம். இதுக்கு மேல என்னை ஒன்றும் கேட்காதே உடன் பிறப்பே, நான் அழுதிருவேன்....
siva - Chennai,இந்தியா
2010-07-16 13:51:34 IST
தேவையற்ற ஜால்ரா நியூஸ்.....
மணி.வி - Chennai,இந்தியா
2010-07-16 13:51:03 IST
வீட்டுக்கே சாய் பாவை அழைத்து அருள் பெற்றவர்கள். ஏன் இன்று திருவாரூர் தேரோட்டமும் இந்த அம்மா முன்னிலையில்தான்!!திமுகவின் பகுத்தறிவு வேஷம் முடிந்து பக்தர் வேஷம் துவக்கம். நடு நடுவே (ஷீரடி போன்ற)மைனாரிட்டி வேஷம். ஆனால் வாய்மையில்லாமல் வெறும் வேஷம் போட்டவன் நன்கு வாழ்ந்ததாகச் சரித்திரம் உண்டா?... 
சாமி - covai,இந்தியா
2010-07-16 11:26:53 IST
திராவிட கொள்ளைகள் கொண்ட குடும்பம் என்று சொல்லிட்டு கோவில், குளம் என போய் சாமி கும்பிடறது கேவலமா தெரியலை. மக்களுக்கு முன் பேச்சு ரொம்ப பலம் தான். ஆனால் வீட்டுக்குள்ளே இருக்குறவங்களின் மூட நம்பிக்கைகளை ஒழிக்க முடியலை. இவங்கெல்லாம் எங்கே போய் நாட்டை திருத்த போறாங்க. காலத்தின் கொடுமை. இவர்கள் வழி செல்லும் தொண்டர்கள் நிலை பெருங்கொடுமை. வாய்கிழிய பேசிட்டு வாசப்படியல நுழைஞ்ச உடனே பக்திபழமா மாறது எல்லாம் சகிக்க முடியாத ஒன்று. எதோ அரசியல் ஓடுது. ஏமாங்க அறியாமை மக்கள் இருக்கும் வரை ஒடுங்க. என்றும் தணியா இந்த நிலை. மனிதனின் அழிவில் மட்டுமே காட்டும் உண்மை நிலை....
anu - USA,இந்தியா
2010-07-16 11:22:40 IST
ஊருக்கு நாத்திக உபதேசம். வீட்டுக்கு என்னவோ

கருத்துகள் இல்லை: