வெள்ளி, 7 ஜூன், 2019

2018-19 வட மாநிலத்தில் நீட் தேர்வு எழுதியவர்கள் அப்பட்டமாக காப்பி அடித்து.. விடை புத்தகங்களை பார்த்து எழுதினார்கள்


Palanivel Manickam : மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த வியாபம் ஊழலை வெளி கொண்டு வந்த ஆனந்த ராய் என்ற கல்வியாளர் சொல்கிறார்,
2018-19 வட மாநிலத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவிய,மாணவர்கள் அத்துமீறி அப்பட்டமாக காப்பி அடித்து எழுதியதையும், விடை புத்தகங்களை பார்த்து எழுதியதையும் வெளிப்படுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.இந்திய சமூகத்தில் முக்கியமான நம்பகத்தன்மை வாய்ந்த மனிதர் இவர்.இவரின் குரல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கேட்கும் வரை எல்லா கூத்துகளையும் அரங்கேற்றும் வட மாதிலங்கள் ஒருபுறம்,
இங்கே 3300 -ற்கும் மேல் மருத்துவ இடங்களை வைத்திருக்கும் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களை கை,காது,தலையில் இருப்பவற்றை பிடுங்கி,துணிகளை கிழித்தும் அவமானப்படுத்துவது மறுபுறம் என சமமற்ற ஒரு போட்டியை மத்திய அரசு திட்டமிட்டு நடத்திக்கொண்டிருக்கிறது.

நீட் தேர்வு எனும் கொடூரத்தால் நேற்று இரண்டு இளம் உயிர்கள் தற்கொலை செய்துக்கொண்டிருப்பதை வலதுசாரி சிந்தைனையாளர்கள் என்ற பெயரில் உலா வரும் உயிரினங்கள் அது வெறும் இறந்தவர்களின் குடும்ப சூழல் சார்ந்த உளவியல் காரணங்களே தற்கொலைக்கு காரணம் என பிதற்றி திரிகின்றன.
அந்த இளம் பிஞ்சுகளுக்கு உளவியல் நெருக்கடியை தந்த கொலைகாரர்கள் யார் என்பதை கடைசி வரை சொல்லாமல் மறைக்கும் இந்த கொலைகாரர்களை என்ன செய்வது?

கருத்துகள் இல்லை: