வியாழன், 6 ஜூன், 2019

NEET 60 ஆண்டுகளில் ஒவ்வொரு செங்கலாக தமிழகம் . அதை மூன்றே ஆண்டுகளில் உடைத்தெறிந்துவிட்டது சனாதானம்.

ந முகுந்தன்  : என் இனிய ஆண்ட பரம்பரைகளா,
நீட் தேர்வில் தேர்வானவர்கள் எண்ணிக்கையை பார்த்தாச்சா?
SC/ST - 20,009
OBC - 63,749
Others - 7,04,335

அதாவது மொத்தமே 83758 பிற்படுத்தப்பட்ட & தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தேர்வான நிலையில் முன்னேறிய வகுப்பினர் மட்டும் 7 லட்சம் பேர் தேர்வாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு அமுலில் இருக்கிறது.
அகில இந்திய அளவில் 49.5% இடஒதுக்கீடு இருக்கிறது.
ஆனால் இந்த தேர்வு முடிவுகள் அடிப்படையில் தேர்வானவர்கள் சதவிகிதம் என்ன தெரியுமா?
12% தான்.
நீட் தேர்வு எதற்காக வலுக்கட்டாயமாக நுழைக்கப்பட்டதோ அந்த இலக்கை நோக்கி சரியாக பயணிக்கிறது.
பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் எதிரெதிர் கட்சியில் இருந்தாலும், சமத்துவத்துக்கும் சமவாய்ப்புக்குமான அடிப்படை கட்டமைப்பை 60 ஆண்டுகளில் ஒவ்வொரு செங்கலாக கட்டி எழுப்பினர்.
அதை மூன்றே ஆண்டுகளில் உடைத்தெறிந்துவிட்டது சனாதானம்.

இனி உரக்க சொல்லுங்கள்:
திராவிடத்தால் வீழ்ந்தோம்
இந்துக்களாக இணைவோம்
இந்தி சமஸ்கிருதம் கற்போம்
எங்கள் அடுத்த தலைமுறையை கால் வயித்து கஞ்சுக்கு கோயில் வாசலில் நிற்க வைப்போம்!
#TNAgainstNEET ந முகுந்தன்

கருத்துகள் இல்லை: