வெள்ளி, 26 அக்டோபர், 2018

சேலம் ராஜலக்ஷ்மி கொலைக்கு நியாயம் கேட்டு சபரிமாலா உண்ணாவிரத போராட்டம் . உடனே தூக்குதண்டனை வழங்....

Subash Chandra Bose Rajavelan: ராஜலக்ஷ்மி கொடுரமான முறையில் கொலை செய்தவனுக்கு ஜந்து நாளில்
விசாரணை நடத்தி தூக்கு தண்டனை வழங்கவேண்டுமென நீட் போராளி சபரிமாலா ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாணவி ராஜலக்ஷ்மி கொடூர கொலைக்கு நீதிகேட்டு வள்ளுவர்கோட்டத்தில் தனியே உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகிறார். நீயூஸ் 7 தமிழுக்கு பேட்டி யளித்த சபரிமாலா ஜெயகாந்தன், தேனி ராகவி கொலை செய்ய பட்டு 30நாட்களுள் சேலத்தில் பள்ளி மாணவி ராஜலக்ஷ்ம கொலைசெய்யபட்டு இருக்கிறார். தொடர்ந்து இது போன்று அரங்கேற்றபடும் கொடுரதிற்கு தீர்வே வருவதில்லைஎன்றும் எல்லோரும்இதை வெறும் நிகழ்வாய் பார்த்து நகருவது வேதனையளிப்பதாக தெரிவித்தார்.
;பெண்கள் அமைப்புகளும் சமூக நீதி இயக்கங்களும் நாட்டில் என்ன செய்து கொண்டிருகிறார்கள் யென கேள்வி எழுப்பி யுள்ளார்.ஆட்சியாளர்கள் ஆட்சியை தக்கவைக்க முழு கவனம் செலுத்துவதை போல் சிறிதளவாவது பெண் குழந்தைகள் உரிமைகளை காக்க முன் வரவேண்டுமென்றார்..

முகநூல் பதிவுகள் :  நீட் எதிர்ப்பு ஆசிரியர் சபரிமாலா அவர்கள் இன்று 26.10.2018 12.00 மணி முதல்........ பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் மற்றும் கழுத்தறுப்பு கொலையை எதிர்த்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் memorial ல் உண்ணாநிலைப் போராட்டம் ஆரம்பம்.

நீட் தேர்வை எதிர்த்து தனது ஆசிரியர் பணியை துறந்த ஆசிரியர் சபரிமாலா அவர்கள் சமீப காலங்களில் பெண்களுக்கு பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலைகளைஎதிர்த்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவு திடலில் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டார்.

அங்கே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வளாகத்திற்கு வெளியே போராட்டத்தை தொடர்ந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ளார். இது தான்

கருத்துகள் இல்லை: