வெள்ளி, 27 அக்டோபர், 2017

பஞ்சாப் தெருக்களில் ஹிந்தி பெயர்கள் தார்பூசப்படுகிறது ,, பெரியாரின் போர்குரல் பஞ்சாப் வரை ..

பஞ்சாபில்
இந்தி எதிர்ப்புப் போராட்டம்!
பலே... பலே... 60 ஆண்டுகளுக்குப் முன்னால் பெரியார் நடத்திய போராட்டம் - இப்போது பஞ்சாபில்!
இரயில் நிலையங்களில் முதலிடத்தில் இந்தியும், இரண்டாமிடத்தில் தமிழும், மூன்றாமிடத்தில் ஆங்கிலமும் இருந்த நிலை, பெரியாரின் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்திற்குப் (அப்போராட்டத்தை அறிஞர் அண்ணா தலைமையிலான திமுகவும் பின்பற்றி நடத்தியது) பிறகு தான் மாறி, முதலிடத்தில் தமிழ் எழுதப்பட்டது. அத்தகைய ஒரு போராட்டம் பஞ்சாபில் இப்போது!
தார் கொண்டு பெரியார் இந்தியை அழித்தபோது, பின்னாடியே நான் மண்ணெண்ணெய் வாளியோடு வந்து இந்தியைக் காப்பேன்னு பேசின ம.பொ.சி மாதிரி, ஏதாவது மாபோசிங் அங்க வந்துடாம பார்த்துக்குங்க பஞ்சாப் சிங்கங்களே!

கருத்துகள் இல்லை: