
பின்னர் குமாரையும், ரித்தீஸ்குமாரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து தீக்குளித்து தற்கொலை முயன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது குமார் போலீசாரிடம் கூறியதாவது:- நான் கடந்த 2015-ம் ஆண்டு எங்கள் பகுதியை சேர்ந்த தங்க நகை வியாபாரி மோன்ராஜ் என்பவருக்கு ரூ. 10 லட்சம் கடன் கொடுத்தேன். ஆனால் பணம் கொடுத்து 2 வருடங்கள் ஆகியும் பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். மகன் ரித்தீஸ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகன்ராஜை சந்தித்து பணத்தை கேட்ட போது அவர் என் மீது கந்து வட்டி புகார் கொடுத்து விடுவதாக என்னை மிரட்டினார்.
நான் இது குறித்து போலீசாரிடம் தெரிவித்த போது அவர்களும் தற்போது உள்ள சூழ்நிலையில் அவர் சொல்லுவதுதான் நியாயமாகும் எனவே நீயே அவரிடம் சென்று பேசி பணத்தை வாங்கி கொள் என்று கூறிவிட்டனர். எனவே என்ன செய்வது என்று தெரியாமல் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு மகனுடன் தற்கொலைக்கு முயன்றதாக கூறினார். தொடர்ந்து குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக