புதன், 25 அக்டோபர், 2017

நெல்லை .. 61 காவல் நிலையங்களும் Almost கந்து வட்டி கும்பலின் கட்டுப்பாட்டில் தான்..

Soorya xavier. : கந்து வட்டி கொடுத்தவனும் பணம் பெற்றவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் தான். பணம் கொடுத்தவனின் மனைவியை ஏன் கொடுத்தாய் என கணவன் தாக்கியதில் அந்தப் பெண்ணும் கடந்த வாரம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் நெல்லை மாவட்டத்தில் உள்ள 61 காவல் நிலையங்களும் ஏறக்குறைய கந்து வட்டி கும்பலின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
நெல்லை மாநகரத்தில் பழைய பஸ் நிலையம் முன்பு காலை 6 மணிக்கு கந்து வட்டி கும்பல் நிற்கும்
கடை வியாபாரிகள் ரூ 1000 காலை 6 மணிக்கு பெற்றால்
மாலை 6 மணிக்குள் ரூ 1100 ஆக கொடுக்க வேண்டும்
இங்கு கந்து வட்டி கும்பல் பலருக்கு வட்டி தொகையே அடைமொழியாகவும் உண்டு
பத்துவட்டி பரமசிவமா என்பது போன்று அழைப்பார்கள்.
2015 முதல் 2017 இதுவரை நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள தற்கொலைகள் நூற்றுக்கும் மேல். இதில் பொருளாதார நெருக்கடி சார்ந்த தற்கொலைகளே அதிகம்

மாவட்டத்தில் அதிகபட்ச தற்கொலைகள் நடக்கும் ஊர் விக்கிரமசிங்கபுரம்
மதுரா கோட்ஸ் ஆலை தொழிலாளர்களை கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பியதால் நடந்த தற்கொலைகள் அதிகம்
இந்நேரம் வரை தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நான்கு பேரும் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் தான் இருந்தேன்
நால்வரும் 80% கருகிய நிலையில் இருப்பதால் உயிர் பிழைப்பது கடினமே
மாவட்ட ஆட்சியர்
காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் மீது சட்டரீதியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்
கந்துவட்டிக்காரர்கள் பட்டியலை எடுத்து அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்

கருத்துகள் இல்லை: