ஜனநாயகத்தில்
நாடாளுமன்றம், சட்டமன்றமும், நிர்வாக அமைப்பும், நீதித்துறை ஆகிய மூன்றும்
பிரிக்க முடியாத அமைப்புகளாகும். இதில் எவை ஒன்று தாக்கப்பட்டாலும், அது
ஜனநாயகம் ஊனப்படுத்தப்பட்டதாகவே கருதப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல்
இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனுடைய கடைசி புகலிடமாக விளங்குவது
நீதிமன்றங்களே. எனவே அதைக் கட்டிக் காப்பது என்பது அனைத்து குடிமகனுடைய
கடமையாகும்.
ஆளுங்கட்சினரே
அரசுப் பேருந்துகளை கொளுத்துவது, பொது சொத்துக்களை சேதப்படுத்துவது, சாலை
மறியல் செய்வது, உண்ணாவிரதம் மேற்கொள்வது, அந்த உண்ணாவிரத்தில்
தீர்ப்பளித்த நீதிபதி, மற்ற எதிர்க்கட்சி தலைவர்களை வசை பாடுவது போன்ற
ஜனநாயக விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நீதிபதியினுடைய
பெயரை சொல்லி அவருக்கு எதிராக சுவரொட்டி ஒட்டி கொச்சைப்படுத்துவது,
உள்ளாட்சி மாமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றுவது, நடிகர் நடிகைகளை விட்டு
உண்ணாவிரதம் இருக்க வைப்பது ஆகியவை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையையேச்
சாரும். ஆனால் தமிழ்நாட்டிலுள்ள காவல்துறை மற்றும் பிற நிர்வாக அமைப்புகள்
இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை தடுத்திட எவ்வித நடவடிக்கையும்
எடுக்கவில்லை.
மேலும்,
இந்த வழக்கானது உச்சநீமன்ற உத்தரவின் பேரிலேயே கர்நாடக மாநிலத்திற்கு
மாற்றப்பட்டதே தவிர அந்த மாநில அரசுக்கும், அம்மாநில மக்களுக்கும்
எவ்விதமான தொடர்புமில்லை என்பதை தமிழகத்தில் ஆசி பொறுப்பில் உள்ள எவரும்
தெளிவுபடுத்தவில்லை. ஆனால் அஇஅதிமுகவினர் போராட்டங்களில் தேவையில்லாமல்
இன்னொரு அண்டை மாநிலத்தோடு மோதல் போக்கை உருவாக்கி, ஆத்திரமூட்டும்
நடவடிக்கைகளே மேலோங்கி வருகின்றன.
கடந்த
20 வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபொழுது
நடைபெற்ற, முறைகேட்டின் விளைவாக போடப்பட்ட வழக்கு. அதற்கு நீதிமன்றம்
கொடுத்த தீர்ப்பு என்பதை அஇஅதிமுகவினரும், அவருக்கு ஆதரவாக போராட்டத்தில்
ஈடுபட்டுள்ள அனைத்து அமைப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து
தமிழகத்தில் உள்ள எதிர் கட்சிகள் மற்றும் தலைவர்கள், நீதிபதிகள் மீது குறை
சொல்லுவது, விமர்சிப்பது, உருவ பொம்மைகள் எரிப்பது வன்மையாகக்
கண்டிக்கத்தக்கது. உடனடியாக இதுபோன்ற ஜனநாயக விரோத செயல்களை தடுத்திட தமிழக
காவல்துறையும், நிர்வாக அமைப்பும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதிய
தமிழகம் வலியுறுத்துகிறது. இவ்வாறு கூறியுள்ளார். nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக