திங்கள், 29 செப்டம்பர், 2014

பதவிஏற்பில் அழுத பன்னீர்செல்வம் , கோகுல இந்திரா ,வளர்மதி .... இனி எல்லோருக்கும் விடுதலை விடுதலை ?

பதவியேற்பில் நா தழுதழுத்த ஓ.பி.எஸ்,குலுங்கி அழுத முக்கூர், தேம்பி அழுத கோகுல இந்திரா!ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க நா தழுதழுக்க உறுதி மொழி ஏற்றுக்கொண்டார். கோகுல இந்திரா பதவியேற்றபோது தேம்பித்தேம்பி அழுதார். கர்ச்சிப்பால் கண்ணீரை துடைத்தபடியே அவர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடுத்து முதலமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் ஜெயலலிதா தானாகவே இழந்தார்.இதனால் அவருக்குப் பதிலாக புதிய முதலமைச்சரை தேர்ந்து எடுக்கும் நிலை ஏற்பட்டது. புதிய முதலமைச்சரை தேர்ந்து எடுப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவசரக்கூட்டம் சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.இதில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ரோசைய்யாவை சந்தித்தார்.  அப்பாடா இனி குனிஞ்சு குனிஞ்சு கும்பிடவேண்டியதில்லை ! கடவுள் இருக்கான்யா ?


அப்போது தன்னை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுத்தற்கான தீர்மானத்தையும், புதிய அமைச்சரவை பட்டியலையும், ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தையும் கவர்னரிடம் கொடுத்தார். இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களை பதவி ஏற்கும்படி அழைப்பு விடுத்தார்.

இன்று மதியம் 1.25 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் முதல் – அமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ரோசையா பதவி பிரமாணமும், ரகசிய காப்புபிரமாணமும் செய்து வைத்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க நா தழுதழுக்க உறுதி மொழி ஏற்றுக்கொண்டார். 

அவருக்கு கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து கீழ்க்கண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

1. நத்தம் விசுவநாதன் 2. வைத்திலிங்கம் 3. எடப்பாடி பழனிச்சாமி 4. பி.மோகன் 5. பா.வளர்மதி 6. பி.பழனியப்பன் 7.செல்லூர் கே.ராஜு 8. ஆர்.காமராஜ் 9. பி.தங்கமணி 10. வி.செந்தில்பாலாஜி 15. கோகுலஇந்திரா 16. சுந்தர்ராஜ் 17. செந்தூர்பாண்டியன் 19. என்.சுப்பிரமணியன் 20.ஜெயபால் 21. முக்கூர் என்.சுப்பிரமணியன் 22. ஆர்.பி.உதயகுமார் 23. கே.டி.ராஜேந்திர பாலாஜி 24. பி.வி.ரமணா 25. கே.சி.வீரமணி 26. ஆனந்தன் 27. தோப்பு வெங்கடாசலம் 28. பூனாட்சி 29. அப்துல்ரகீம் 30. விஜயபாஸ்கர். 

ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த அனைத்து அமைச்சர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

கோகுல இந்திரா பதவியேற்றபோது தேம்பித்தேம்பி அழுதார். கர்ச்சிப்பால் கண்ணீரை துடைத்தபடியே அவர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.  முக்கூர் என்.சுப்பிரமணியன் உறுதிமொழி படிக்கும்போது குலுங்கி குலுங்கி அழுதார்.

புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் தலைமை செயலாளர் மோகன்வர்கீஸ், சபாநாயகர் தனபால், மேயர் சைதை துரைசாமி, கொறடா மனோகரன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: