புதன், 25 மே, 2011

யாழ் கைதிகளுக்கு இருவார காலத்துக்குள் தீர்வு

யாழ் சிறைச்சாலை கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்னும் இருவார காலத்துக்குள் ஆவண பரிசோதனைகளுடன் கூடிய தீர்வு ஒன்று முன்வைக்கப்படும் என யாழ் இந்து பௌத்த கலாசார பேரவையின் தலைவரும், ஜனாதிபதியின் இணைப்பாளரும் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் ஆலோசகருமான எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், கைதிகள் தொடர்பில் நீதி அமைச்சரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அவர் வெளிநாட்டுக்கு சுற்றுபயணம் மேற்க்கொண்டுள்ளமையால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கைதிகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அதனை அடிப்படையாகக் கொண்டு நீதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: