சனி, 28 மே, 2011

எந்திரன் கதை திருட்டு விவகாரம்: கலாநிதி மாறன், ஷங்கருக்கு கோர்ட் சம்மன்

எந்திரன் படக்கதை விவகாரம் தொடர்பாக, அப்படத்தின் இயக்குநர் ஷங்கரும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் கோர்ட்டில் ஆஜராக எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட்டு கோர்ட் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

சன் பிச்சர்ஸ் கலாந்தி மாறன் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் எந்திரன். இப்படம் 2010 அக்டோபர் 1ல் வெளியானது. எந்திரன் படத்தின் கதை தனக்கு சொந்தமானது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் உரிமை கோரி எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:

நான் 1996ல் ஜுகிபா என்ற பெயரில் சிறுகதை எழுதினேன். அக்கதை இனிய உதயம் என்ற தமிழ் மாத இதழில் வெளியானது. இதே கதையை அந்த நிறுவனம் திக் திக் தீபிகா என்ற பெயரில் புத்தகமாக 2007ல் பிரசுரித்தது. அது புத்தக கண்காட்சிகளில் விற்பனையானது. அரசு நூலகங்களுக்கும் வாங்கப்பட்டன.
அந்த கதையை தழுவி இயக்குனர் ஷங்கர் எந்திரன் என்ற படத்தை எடுத்து வெளியிட்டு உள்ளார். எந்திரன் படத்தை பார்த்த என்னுடைய வாசகர்களும், நண்பர்களும், உங்களுடைய ஜூபிகா கதைதான் எந்திரன் படமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். பிறகு நானும் அப்படத்தைப் பார்தது அதிர்ச்சி அடைந்தேன். என்னுடைய கதையை அப்படியே காப்பி அடித்து படம் எடுத்துள்ளனர்.
இது இந்திய காப்புரிமை சட்டத்தை மீறியதாகும். மேலும் மோசடி மூலமும் குற்றம் புரிந்துள்ளார்கள். எனவே இவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த வழக்கை 13வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு சிவகுமார் விசாரித்தார். ஆரூர் தமிழ்நாடன் சார்பில் வக்கீல்கள் ராஜகோபால், எட்விக், சிவகுமார் ஆகியோர் ஆஜரானார். இந்த வழக்கில் ஜூன் மாதம் 24ந் தேதி இயக்குனர் ஷங்கரும், தயாரிப்பாளரும் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்ப மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இதுகுறித்து ஆரூர் தமிழ்நாடன் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது கதை திருட்டு தொடர்பாக ஷங்கர் மீதும் தயாரிப்பாளர் மீதும் மோசடி காப்புரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் அளித்தேன். அந்த கதையின் காப்புரிமை <
என்னிடமே உள்ளதென்றும் என்னிடம் அனுமதி பெறாமல் படம் எடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினேன்.

ஆனால் தயாரிப்பாளர் பெயரை புகாரில் இருந்து நீக்கினால்தான் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று வாய்மொழியாக என்னிடம் தெரிவித்தனர். நான் மறுத்து விட்டேன். இதனால் புகாரை கிடப்பிலேயே போட்டு வைத்திருக்கிறார்கள். அதனால்தான் பிரைவேட் வழக்கு தொடர்ந்தேன். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பலமாக இருக்கிறது என்றார்

கருத்துகள் இல்லை: