திங்கள், 23 மே, 2011

வியாழன், 5 மே, 2011நாம் அன்று எழுதிய இந்த கருத்துக்கள் இன்று உண்மையாகி விட்டன

எந்த கூட்டணி ஆட்சி அமைக்கப்போகிறது?

பரம்பரை பரம்பரையாக திமுகமீதும் கலைஞர் மீது வெறுப்பின் உச்சியில் நின்று கொண்டு விஷம் கக்கி வரும் உயர் ஜாதி அரசியல்வாதிகள் அலைக்கற்று வரிசை விவகாரத்தை பயன் படுத்தி சேறு வாரி தூற்றி வருகின்றனர். இந்த ஒன்றை வைத்து கனிமொழியை கைது செய்து அவமானப்படுத்தி விடலாம் என்று மனப்பால் குடிக்கின்றனர்.
சுப்பனும் குப்பனும் வாழ்வில் முன்னேறுவதை சகிக்க முடியாதவாள் எல்லாம் ஒண்ணு சேந்துட்டா பாருங்கோ. குடிசை வீட்டிலும் கம்பியுட்டர் டிவி மற்றும் உயர் கல்வியை காண பொறுக்காதவர்கள் எல்லாரும் ஒண்ணா பஜனை பாட ஆரம்பிச்சிட்டா. ராஜாவின் நிர்வாகத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்படுவதும் அதை தமிழக தேர்தல் நேரம் பார்த்து கையில் எடுத்ததும் சந்தேகம் வரத்தானே செயும்? யார் மீது ? ஆதிக்க சக்திகள் என்று கலைஞர் அடிக்கடி குறிப்பிடுவது யார் என்று அவா எல்லோருக்கும் புரியும்.
தேர்தல் கமிஷன் வேறு மாநிலங்களுக்கு ஒரு நீதி தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி என்பது ஏற்புடையதா?
தேர்தல் நடைபெற்று ஒரு மாதம் கழித்துதான் எண்ணுவோம் என்பது எதற்காக?
விஜயகாந்த், அதிமுக, காங்கிரஸ், சி பி ஐ மற்றும் தேர்தல் கமிசன் போன்றவர்களை சற்று ஒரே வரிசையில் வைத்து பாருங்கள் ஒரு கண்ணுக்கு புலப்படாத சாதிக்கூட்டணி ஒன்று உருவாகிவருவதாக ஒரு தோற்றம் எழுவதை மறுப்பது கடினம். 
நாம் அன்று எழுதிய இந்த கருத்துக்கள் இன்று உண்மையாகி விட்டன

கருத்துகள் இல்லை: