சனி, 28 மே, 2011

Kalaignar எனது பாடலை நீக்கிவிட்டு சமச்சீர் கல்வியை அமல் செய்யலாமே?

"நான் எழுதிய பாடல் சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டத்தில் இடம்பெறுவதை விரும்பவில்லை என்றால், அதை எடுத்துவிட்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்தலாமே?' என, முன்னாள் முதல்வர் கருணாநிதி, அரசுக்கு கேள்வி எழுப்பிஉள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சமச்சீர் கல்வியை அமல் செய்ய, சமச்சீர் கல்வி முறை அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. பள்ளி கல்வித் துறை அமைச்சர் தலைமையில், கல்வியாளர்களிடம் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அதன்படி, 2010 - 2011 கல்வி ஆண்டில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு வரையும், 2011-12 கல்வி ஆண்டில் எஞ்சிய வகுப்புகளுக்கும், சமச்சீர் கல்வியை அமல் செய்யலாம் என, முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, சமச்சீர் கல்விச் சட்டத்தை தள்ளுபடி செய்ய தொடரப்பட்ட வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும், "பாடத்திட்ட நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும். தனியார் பதிப்பகம் வெளியிடும் பாடப் புத்தகங்களை ஏற்க வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, பாடத்திட்ட நெறிமுறை வெளியிடப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு பாடத்திட்டங்கள் வழங்கப்பட்டு, கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி அமல்செய்யப்பட்டது.

சமச்சீர் கல்வி முறைக்கு, சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தடை கோரி செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அரசின் கொள்கை முடிவுப்படி, இரண்டு முதல் 10ம் வகுப்புகளுக்கு (6ம் வகுப்பு தவிர) 200 கோடி ரூபாய் செலவில் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு, 2011-12ம் கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வியை அமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு கட்டமாக பணிகளை மேற்கொண்டு, சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. சமச்சீர் கல்வியை கைவிடுவது, மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. சமூகநீதியை நிலைநாட்ட கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை தள்ளி வைப்பது, விவாதத்தைக் கிளப்பியுள்ளது என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. சமச்சீர் கல்வி முறை ரத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கில், வல்லுனர்களைக் கொண்டு ஆராய்ந்து கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை எளிதில் புறக்கணித்துவிட முடியாது. இதுபற்றி, அரசுக்கு அட்வகேட் ஜெனரல் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சமச்சீர் கல்வி முறையை எதிர்ப்பது, தி.மு.க., கொண்டு வந்த திட்டம் என்பதால் மட்டுமே என புரிந்து கொள்ள முடிகிறது. இதைத் தவிர வேறு காரணம் என்ன கூறமுடியும்? ஒருவேளை, தொல்காப்பியம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், வளையாபதி, குண்டலகேசி, ராமாயணம் பேன்ற இலக்கியங்களை இணைத்து, நான் எழுதிய பாடல், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் இருப்பதால் சமச்சீர் கல்வியை விரும்பவில்லையா? அப்படி இருந்தால், அந்தப் பாடலை எடுத்துவிட்டு சமச்சீர் கல்வியை அமல் செய்யலாமே? இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
Arumugam Eswaran - Tirupur,இந்தியா
2011-05-28 06:54:32 IST Report Abuse
இங்கே கருத்துச்சொன்னவர்களில் யாராவது சென்ற வருடம் அமுல் படுத்திய ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கான புதிய பாடப்புத்தகத்தை(சமச்சீர்) பார்த்துள்ளார்களா...இல்லை தற்போது வந்துள்ளதைத்தான் பார்த்துள்ளார்களா எனத்தெரியவில்லை..சமச்சீர் கல்வி பாடத்தில் கருணாநிதி பாடலுக்காக மட்டும் எடுக்கப்படவில்லை..அது மேலோட்டமாக கூறப்படுவது..சமச்சீர் கல்வி என்பது ஏதோ கருணாநிதி கொண்டுவந்தது அல்ல..கடந்த ௦பத்து வருடங்களுக்கும் மேலாக கல்வியாளர்களும்,இடதுசாரிகளும் வற்புறுத்தி வந்ததுதான். இவர்களின் போராட்டம் காரணமாகவே வேறு வழியில்லாமல் கருணாநிதி ஓரளவு அமுல்படுத்தினார். ஐயப்பன் கோவிலில் பதினெட்டு படிகள் சென்று சாமி தரிசனம் செய்ய முதல் படியில் காலடி எடுத்து வைப்பது போல சமச்சீர் கல்வியை நோக்கி வைத்த முதல்படி தான் கருணானிதி செய்தது.சமச்சீர் கல்வியென்றால் அனைவருக்கும் ஒரே பாடப்புத்தகம் மட்டுமல்ல..அனைத்து அரசு/தனியார் பள்ளிகளிலும் ஒரே மாதரியான வகுப்பறைகள்/கல்வி உபகரணங்கள்/தகுதிபெற்ற ஒரே மாதிரியான ஆசிரியர்கள் இப்படி பலவும் அடங்கும். ஏற்கனவே இதுவரை இருந்த பாடப்புத்தகங்கள் மனப்பாடத்தை அடிப்படையாகக்கொண்டவை..மாணவர்களின் கேள்வி கேட்கும் இயல்பை மழுங்கச்செய்யும் கல்வி முறை..தற்போது பல குறைகள் இருந்தாலும் இப்பாடங்கள் குழந்தைகளின் தேடலை ஊக்குவிப்பதாக, கேள்வி கேட்கும் ஞானத்தை ஊக்குவிப்பதாகும்..மூன்று வயது வரையில் நமது குழந்தைகள் கேள்வி மேல் கேள்வி கேட்டு பதிலை அறியும் முயற்சியில் ஈடுபடும்..பள்ளியில் கொண்டு விட்டவுடன் கையைக்கட்டு, பேசாதே!சத்தம் போடாதே! வாய்மேல் விரலை வை என மிரட்டப்படுவதால் , இது என்ன? அது என்ன? என்று ஆராயும் திறனை நமது குழந்தைகள் இழந்து விடுகின்றன..இதை மாற்றும் ஒரு சிறு முயற்சி தான் தற்போது குப்பைக்கூடைக்கு போய்விட்டது.. ஆ.ஈசுவரன்/திருப்பூர்.
Thennavan - Chennai,இந்தியா
2011-05-28 04:18:19 IST Report Abuse
கலைஞர் தன்னுடைய அறிக்கையில் தெளிவாக எடுத்து சொல்லி இருக்கிறார்...இங்கு அது முழுமையாக வெளிடப்டவிட்டாலும்......கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு அறிங்கர்கல் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட திட்டத்தை ஆட்சிக்கு வந்து ஒரு வார காலத்திற்குள் அதில் தரம் இல்லை என்று எந்த அதாரம் இன்றி.....என்று சொல்கிறார் இன்றைய முதல்வர்.... முதலில் இவர் விளக்கட்டும் தரம் இல்லை என்று சொல்வதிற்கு இவர் என்ன அய்ய்வு செய்தாரா அதுவும் ஆட்சிக்கு வந்த முன்றே நாளில்....கலைஞர் இயற்றிய இலக்கிய பற்றிய பாடல்தான் பிரச்சினை என்றால் அதை நிக்கி விட்டு 200 கோடி மக்கள் வரி பணத்தை வினடிக்காமல் இருக்கலாமே......அது மட்டும் இல்லை இது உச்சநிதி மன்றம் முலம் அனுமதி பெற்று கொண்டு வரப்பட்டது சமிச்சிர் கல்வி.....நினைத்தை எல்லாம் செய்வதிற்கு இது ஒன்றும் 1991 கிடையாது என்பதை விரைவில் புரிந்து கொள்வார் ....நேற்றைக்கு தான் ஐகோரட் நீதிபதி வாசுகி.....உச்ச நிதிமன்றம் உத்தரவை மீறி செயல்பட மாநில அரசக்கு உரிமை உள்ளதா என்று தமிழக அட்டர்னி ஜெனெரல் நவநித கிருஷ்ணன்ன கேட்டு உள்ளார்ர்...அது மட்டும் இல்லாமல் தமிழக அரசுக்கு சட்டத்தை பற்றி சரியாக அறிவுரை சொல்ல் சொல்லி இருக்கிறார்.....தமிழக அரசே நல்ல முடிவு எடுத்து மக்கள் வரி பணத்தை வீண் அடிக்கமால் இருப்பதே நல்லது....உச்ச நீதிமன்றம் உத்தரவு ப்ரபித்தால் பின் மீற முடியாது அது அரசுக்கு கெட்ட பெயர்தான் பெற்று தரும்...
Siva Kumar S - l.india,சிங்கப்பூர்
2011-05-28 07:18:07 IST Report Abuse
படிச்சது தமிழ்நட்டு மக்கள் வரி பணத்தில், வேலை பாக்குறது வெளிநாட்டு காரனுக்கு நீ முதலில் தமிழனாய் இருந்து அதன் பின் அவரை நீக்க முயற்சி செய்... பல கல்விமான்கள் ஆராய்ந்து அவர்களது அனுமதி பெற்று அச்சடிக்கப்பட்ட 200 முதல் 500 கோடிரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை தவறில்லை... தமிழின் பெருமையை பரப்பியவரில் இவருக்கும் துளி பங்குண்டு அந்தவகையில் பாடபுத்தகத்தில் பாடல் எழுத(முதல்வராய் இருக்கும் போது ) உரிமை இருக்கும். இதை சொன்னால் கால்புனர்சி என்பீர்கள் அப்படிதானே ......
 
சந்தோஷ் கோபால் அவர்களே ,அம்மாவுக்கு தெரியாதா சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த ஆட்சியில் அறிவித்தது.அவர் எதிர்கட்சியாய் இருக்கும் போது இந்தமாதிரி திட்டங்களில் குறைகள் இருந்தால் தட்டி கேட்பதற்கு அல்லவே மக்கள் இவருக்கு ஓட்டளித்தனர்.இவர் ஆட்சி பொறுப்பேற்கும் வரை தமிழ் நாட்டில் என்ன நடந்ததாலும் கண்டுக்க மாட்டார் இவர் ஆட்சி ஏறிய உடன்தான் தெரிந்ததா இது எல்லாம் தவறு என்று.கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சியாய் என்ன செய்தார்.மம்தாவை பாருங்கள் சிங்கூர் தொழிற்ச்சாலை கட்டுவதை தடுத்து நிறுத்தி அவர் தனது கடமையை சிறப்பாக செய்தார் அப்படி உங்கள் அம்மாவும் கடந்த ஆட்சியில் தவறான திட்டங்களை நிறுத்தி இருந்தால் மக்களின் வரிப்பணத்தில் எவ்வளவு மிச்சபடுத்திஎருக்க முடியும்.இவரது வழக்குகாக இருக்கிற அத்தனை நீதி மன்றங்களிலும் தடை வாங்க தெரிந்த இவரால் இந்த மாதிரி மக்கள் நலத்திட்டங்களில் குறைகள் ஏற்படும்போது தடைவாங்க தெரியாதா சமச்சீர் கல்வியையே நீக்கிவிட்டு பழைய பாடத்திட்டங்கள் படி புத்தகம் அச்சடிக்கும் muyarchikku பதில் இந்த புதிய சசீர்கல்வியில் குறைகள் இருந்தால் நீக்குவது அல்லவே சரியானது....
 

கருத்துகள் இல்லை: