வியாழன், 26 மே, 2011

University Ragging பல்கலைக்கழகத்தை மூடியேனும் பகிடிவதையை ஒழிப்பேன்" - அறிவுள்ள அமைச்சர் கருத்து

பல்கலைக்கழகங்களை மூடியேனும் பகிடிவதைகளை இல்லாதொழிக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் 80 சதவீதம் பல்கலைக்கழக பகிடிவதைகளை இல்லாமொழிக்க தம்மால் முடிந்துள்ளதென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றில் இன்று (26) உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஊதியத்தை அதிகரிக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எதிர்வரும் மாதம் மூன்றாம் திகதி இடம்பெறவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: