வெள்ளி, 27 மே, 2011

கனிமொழியிடம் சின்னக் கலக்கம் கூட இல்லை. அசாதாரண தைரியத்துடன்

அடுக்கடுக்கான சோதனைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது தி.மு.க.மே 13-ந் தேதி வெளியான தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த தி.மு.க.வினரையும் மனதளவில் புரட்டிப்போட்டுவிட்டது என்றால், மே 20-ந் தேதியோ, அவர்களை உச்சபட்சமாய் பதறவைத்துவிட்டது.அன்றுதான் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வெளியானது. தீர்ப்புக்கு முதல் நாளான 19-ந் தேதி டெல்லியில் இருந்து கலைஞரைத் தொடர்புகொண்ட தி.மு.க.நாடாளுமன்ற கட்சித் தலைவரான டி.ஆர்.பாலு "கனிமொழிக்கு நிச்சயம் ஜாமீன் கிடைத்துவிடும். ராம்ஜெத்மலானி யின் வாதம், புதிய கோணத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. நான் இங்கு பலரையும் சந்தித்துக் கேட்டபோது ஜாமீன் கிடைத்துவிடும் என்று உறுதிபடக் கூறுகிறார்கள்' என தான் சந்தித்த சிலரது பெயரையும் குறிப்பிட்டு நம்பிக்கையூட்டினார்.கனிமொழியின் தாயாரான ராஜாத்தியம்மாள், ஜாமீன் கிடைத்ததும் கனிமொழி சென்னைக்குத்தானே வரப்போகிறார் என்று, டெல்லிக்குக் கூட போகாமல் மகளின் வரவுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார். நாம் அன்றே கனிமொழிக்காக வாதிடும் டீமில் இருக்கும் வழக்கறிஞர்களிடம் கேட்டபோது "சட்டப்படி பெயில் கிடைக் கும். அதே சமயம், இந்த வழக்கு அதிக பரபரப்பாக்கப்பட்டு இருப்பதால் எதிராகப் போகத்தான் வாய்ப்பு இருக்கிறது' என்று நெற்றி சுருக்கினர்.20-ந் தேதி காலை தன் கணவர் அரவிந்தனுடன் கனிமொழி நீதிமன்றத்துக்கு வந்தார். கலைஞர் தொலைக்காட்சி இயக்குநர் சரத்தும் கலவர முகத்துடனே அங்கு ஆஜராக, டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்களும் கட்சியின் முக்கியஸ்தர் களும் வழக்கறிஞர்களும் முன்னதாகவே வந்து காத்திருந்தனர். தீர்ப்பை மதியம் ஒரு மணிக்கு வழங்குவதாக நீதிபதி சைனி சொல்ல, காத்திருந்த அத்தனைபேர் நெஞ்சிலும் படபடப்பு. எல்லோரும் நீதிபதி சைனி முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நீதிபதியோ 2.30-க்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்து பதட்டம் கலந்த சஸ்பென்ஸை நீட்டித்தார்.மதியம் 2.30-க்கு நீதிபதி சைனி தீர்ப்பு வழங்க ஆயத்தமானார். பிறகு?வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்தும் கனிமொழியின் மன நிலை குறித்தும், கனிமொழியுடனே இருந்த முன்னாள் அமைச்சர் பூங்கோதையிடம் நாம் கேட்டபோது ""எல்லோரும் எழுந்து நின்றோம். கனிமொழியும் சரத்தும் கூட அமைதியாக எழுந்து நின்றனர். தீர்ப்பு எப்படி இருக்குமோ என்ற பட படப்பில் இருந்தோம். நீதிபதியோ நாங்க எதிர்பார்த்ததற்கு மாறாக, கனிமொழிக்கு ஜாமீன் வழங்க இயலாது என்று தெரிவித்துவிட்டார். சரத்தின் மனுவும் நிராகரிக்கப்பட்டது. ஒரு நிமிடம் எங்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. கனிமொழிக்கு பக்கத்தில் இருந்த நூர்ஜகான் பேகமும் காரல்மார்க்ஸும், அய்யோ இப்படி ஆயிடிச்சேன்னு அழ ஆரம்பிச்சிட்டாங்க. கனிமொழிதான் அவங்களை சமாதானப் படுத்தினாங்க. எனக்கும் கண்ணில் நீர் திரண்டது. எனது கை களைப் பிடித்துக்கொண்டு, "ஏன் அழறே? எதா இருந்தாலும் சந்திப்போம். நான் எந்தத் தப்பும் செய்யலை. அதனால் பயப்படவேண்டிய அவசியமும் இல்லை' என கனிமொழி அசாதாரண தைரியத்துடன் எனக்கும் ஆறுதல் சொன்னாங்க.. கனிமொழியிடம் சின்னக் கலக்கம் கூட இல்லை.அவங்களை சிறைக்கு அழைச்சிக்கிட்டுப் போனப்ப, அத்தனைக் கட்சிக்காரங்களும் வழக்கறிஞர்களும் கலங்கினாங் களே தவிர கனிமொழி புன்னகையோடுதான் புறப்பட்டார். மறுநாள் காலை சிறையில் இருந்து அவங்களைக் கோர்ட்டுக் குக் கொண்டுவந்தப்பவும் பார்த்தேன். அப்ப கனிமொழி, "நான் கலங்கிக் கண்ணீர் விட்டதா மீடியாக்கள் செய்தி வெளியிட்டு என்னை அவ மானப்படுத்தியிருக்கு'ன்னு வேதனையா சிரிச்சாங்க'' என்றார் இறுக்கம் குறையாமலே."சிறை அனுபவம் பத்தி கனிமொழி அப்ப என்ன ஃபீல் பண்ணினாங்க?' என்றோம்.பூங்கோதையோ ""சிமெண்ட் திட்டினால் ஆன படுக்கை இருந்ததாம். முதல் நாள் அவங்களுக்கு தலை யணை இல்லை. மறுநாள் காலை கொண்டுவந்து கொடுத்திருக்காங்க. சிறைக்குள் இருக்கும் கேண்டீனில் டோக்கனைக் கொடுத்து பப்ஸ், பிஸ்கட் மாதிரியானவைகளை அவங்க வாங்கிக்கலாம். இதுக்காக அவங்களுக்கு முதல்நாள் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தபோது, ஆயிரம் ரூபாயே போதும்னு சொல்லிட்டாங்க. சிறையில் கொசுக்கடி, மூட்டைப் பூச்சிக் கடின்னு கூட அவங்க குறைபட்டுக்கலை. அசாத்திய மன தைரியத்தோட இருந்தாங்க'' என்றார் ஆச்சரியம் விலகாமல்.கோர்ட்டில் இருந்த மற்றவர்களோ ""அவங்க கணவர் அரவிந்தன் கோர்ட் டில் சமாதானம் சொன்னப்பக் கூட, "நான் அதிர்ச்சியடை யலை. வருத்தமும் படலை. ஆனா நம்ம தரப்பு வாதத்தைக் கூட நீதிபதி பரிசீலிக்க லையே என்கிற ஆதங்கம் மட்டும்தான் எனக்கு இருக்கு'ன்னு சொன்னாங்க'' என்கிறார்கள் உருக்கமாய்.திகார் சிறைக்கு கொண்டு செல்லப் பட்ட கனிமொழி 6-ம் எண் அறையிலும் சரத் 4-ம் எண் அறையிலும் அடைக்கப்பட்டார்கள். பத்துக்கு பதினைந்து அளவுள்ள கனிமொழி யின் அறையில் படுத்து கொள்ள வசதியாக ஒரு சிமெண்ட் பெஞ்ச், மினி கட்டில்போல் கட்டப் பட்டிருக்கிறது. அதன் மீது விரித்துப் போட்டுக் கொள்ள பெட்ஷீட் கொடுப்பார்கள். சொந்த பெட்ஷீட்டையும் பயன் படுத்திக்கொள்ளலாம். அந்த அறையில் ஃபேனும் டி.வி.யும் உண்டு. அதே அறையில் இருக்கும் டாய்லட்டை மறைக்க திரைச் சீலை போடப்பட்டிருக்கிறது. இதில்தான் கனிமொழி தன் சிறை நிமிடங்களைக் கரைத்துக் கொண்டிருக்கிறார்.
கனிமொழி கைது செய்யப்பட்டு சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அதே நேரம், சென்னையில் கலைஞர் பலத்த அதிர்ச்சியில் இருந்தார். ஸ்டாலின் அருகிலேயே இருந்து சமாதானப் படுத்திக் கொண்டிருக்க, விசயத்தைக் கேள்விப் பட்டுக் கலங்கிப்போன அழகிரி, சென் னைக்கு ஃபிளைட் பிடித்தார். பேராசிரியர், துரைமுருகன், பொன்முடி, நேரு, எ.வ.வேலு போன்றோர் கலைஞருக்கு ஆறு தல் சொல்லும் வழிதெரியாமல் இறுகிப் போய் உட்கார்ந்திருந்தனர். தங்கம் தென்னரசோ ‘"ஐயா இப்படி ஆய்டிச்சே' என அழுதார். கலைஞரின் இல்லத்துக்கு வந்த தி.க.வீரமணியும் திருமாவும், அங்கு நிலவிய துயரத்தைக் கண்டு பேச்சற்று இறுகிப்போக, "ஏன் எல்லோரும் அமைதியாக இருக்கீங்க?' என ஒருகட்டத்தில் கலைஞரே தன்னைத் தேற்றிக்கொண்டு அமைதியைக் கலைத்தார்.

திருமாவோ ""எப்படியும் ஜாமீன் கிடைச்சிடும்னு நம்பிக்கையோடு இருந்தேன். ஆனா டெல்லிக்காரங்க எப்பவுமே நமக்கு எதிரியாத்தான் இருக்காங்க. எத்தனை யோ நெருக்கடிகளை சந்திச்ச நீங்க, இதிலும் ஜெயிப் பீங்க. உங்களுக்கு நாங்க துணையா இருப்போம். அர சியல் ரீதியா டெல்லியுடன் வைத்திருக்கும் உறவுபத்தி, அய்யா நீங்க பரிசீலிக்கணும்'' என்றார் உணர்ச்சி வசப்பட்டவராக. வீரமணியோ ""சுப்ரீம் கோர்ட் கண்காணிக்கிறது என்பதாலேயே, நாம இதில் தலையிடவேண்டாம். மேல் கோர்ட்டிலேயே பார்த்துக்கட்டும்னு நீதிபதி நினைச்சிருப்பார். மேல் கோர்ட்டில் நிச்சயம் நமக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்'' என்றார் நிதானமாக.
இதற்கிடையே, மத்திய அரசு வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைத் தொடர்ந்து பிரதமர், கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கும் விருந்தில் தி.மு.க. கலந்துகொள்வது குறித்தும் விவாதம் எழுந்தது. தி.மு.க. நாடாளுமன்றத் தலைவர் என்ற முறை யில் டி.ஆர்.பாலுவை மட்டும் கலந்துகொள்ளச் செய்வது என்று தீர்மானித்தார் கலைஞர். அதேபோல் 23-ந் தேதி கனிமொழி, ராசா, சரத் ஆகியோரைப் பார்க்க டெல்லிக்குப் போக முடிவெடுத்த கலைஞர், டெல்லியில் சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர் கள் யாரையும் சந்திப்பதில்லை என்றும் முடிவெடுத்தார்.


திட்டமிட்டபடி 23-ந் தேதி டெல்லிக்கு வந்த கலைஞரிடம், பாட்டியாலா நீதி மன்றத்தில் மீடியாக்கள் அதிகமாக இருக்கும் என சொல் லப்பட்டதால், மாலை யில் திகார் சிறைக்கே சென்றார்.

மாலை 5.30 மணியளவில் திகார் சிறைக்குச் சென்ற கலைஞர் முத லில் கனிமொழியை அழைத்துப் பேசினார். அப்போது கலைஞர் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.

"எப்படிம்மா இருக்கே?' என கலைஞர் வாஞ்சை யாய்க் கேட்க, "நான் நல்லா இருக்கேம்ப்பா. நீங்க உடம்பைப் பார்த்துக்கங்க. இதுக்காக ஏன் இவ்வளவு தூரம் வந்தீங்க?' என கனிமொழி செல்லமாகக் கடிந்து கொண்டார்.

"நீ தைரியமா இரும்மா' என கலைஞர் தெம்பூட்ட முயல,

கனிமொழியோ "நான் நல்லாத்தாம்ப்பா இருக்கேன். எதையும் ஃபேஸ் பண்ண நான் ரெடி' என கலைஞரை மனதைரியத்தால் ஆச்ச ரியப்படுத்தினார். ராஜாத்தியம்மாள்தான் கனி மொழியைப் பார்த்ததும் உடைந்து போய்விட் டார். அவரையும் கனிமொழி தேற்றினார்.

எமோஷனலைக் காட்டாத கலைஞர் "சட்டரீதியா ஜெயிப்போம்' என்றார் கனிமொழியிடம்.

அடுத்து ராசாவை சந்தித்த கலைஞர், நலனை விசாரித்துவிட்டு "மேற்கொண்டு இந்த வழக்கில் என்ன செய்யலாம்' என்று கேட்க...

ராசாவோ "என்னால் உங்களுக்கு எவ்வளவு பிரச்சினை. இதையெல்லாம் பொய்யின்னு உடைச்சிக்காட்டுவோம்' என்றார்.
கலைஞரோ "தைரியமா இரு. பார்த்துக்க லாம்' என ஆறுதல் சொல்ல, "தேர்தல் ரிசல்ட் இப்படி வரும்னு நான் எதிர்பார்க்கலை' என ராசா வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார்.

"எல்லாக் கணக்குமே தப்பாப் போய் டிச்சி' என்ற கலைஞர் அடுத்து சரத்குமாரை சந்தித்தார். ரொம்பவும் டென்ஷனாக இருந்த சரத்துக்குதான் கலைஞர் அதிகம் தைரியம் சொல்ல வேண்டியிருந்தது.
திகாரிலிருந்து ஹோட்டலுக்கு திரும் பிய கலைஞரை உள்துறை அமைச்சர் ப.சிதம் பரம் சந்தித்துப் பேசினார். அப்போதுதான் கலைஞர், ப.சிதம்பரத்திடம் பல விஷயங்கள் பேசி வருத்தப்பட்டதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

-டெல்லியிலிருந்து உமர்முக்தார்


மத்தியில் இருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெற்றிகரமாக மூன்றாவது ஆண் டில் அடியெடுத்து வைப்பதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு 22-ந்தேதி பிரதமர் மன்மோகன்சிங் விருந்து கொடுத்தார். இதில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு மட்டுமே கலந்து கொண்டார். விருந்தின் போது டி.ஆர்.பாலுவிடம் பேசிய சோனியா "கனிமொழி கைதாகக் கூடாது என்று நினைத்தேன். அதற்காக நானும் சில முயற்சிகளை எடுத்தேன். ஆனாலும் இப்படியாகி விட்டது. இதனால் நானும் வேதனை அடைந் தேன்' என வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை: