புதன், 25 மே, 2011

தமிழ் செல்வனின் மனைவி, பிள்ளைகள் நிபந்தனையுடன் விடுதலை!

இலங்கை பாதுகாப்பு படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனின் மனைவி சசிரேகாவும் அவரின் இரு பிள்ளைகளும் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்செல்வன் 02.11.2007 அன்று இலங்கை விமானப்படையினரின் குண்டு தாக்குதலில் பலியானார். அவரின் மனைவியும் பிள்ளைகளும் யுத்தத்தின் இறுதிகட்டத்தில் வவுனியா அகதி முகாமுக்கு இடம் பெயர்ந்திருந்தனர்.
அப்போது குற்றத்தடுப்பு பிரினரால் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட இவர்களை விடுவிப்பதற்கான முயற்சியினை முன்னாள் விடுதலை புலிகளின் தளபதிகளில் ஒருவரும் தற்போதைய அரச அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: