திங்கள், 23 மே, 2011

ஜெயலலிதா முன்னிலையில் கிடா வெட்டு, கொடைநாடு அம்மன்

கோத்தகிரி: சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் பொருட்டு நேற்று கொடநாட்டில் கிடா வெட்டு நடந்தது.

சிறப்பு பூஜை

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் கோடநாடு எஸ்டேட்டில் கிடா வெட்டு நடந்தது. எஸ்டேட்டில் உள்ள அம்மன் கோவிலில் ஜெயலலிதா பெயரில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கிடா வெட்டப்பட்டது.

இதில் 200-க்கும் மேற்பட்ட எஸ்டேட் தொழிலாளர்கள், உள்ளூர் அதிமுகவினர், சுற்றுலாத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விருந்து

பூஜைகள் முடிந்ததும் தொழிலாளர்களுக்கும், கட்சியினருக்கும் பிரம்மாண்டமான விருந்து நடந்தது.
 

English summary
A grand feast was held in Kodanad to celebrate the victory of ADMK. Special pooja was performed in the temple inside the Kodanad estate. Estate workers, local ADMK functionaries and tourism minister participated in this.

கருத்துகள் இல்லை: