புதன், 29 செப்டம்பர், 2010

மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியில் பேராதனை பல்கலை மாணவர்கள்!


பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாபெரும் ஆர்ப்பட்ட பேரணி ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்தார்.பேராதனையில் புறப்பட்ட பேரணி தற்பொழுது கண்டி நகரை வந்தடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நான்கு மாணவத் தலைவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியே இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படுகிறது.(பட இணைப்பு)

கடந்த ஜூலை மாதம் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க பேராதனை பல்கலைகழகத்திற்கு விஜயம் செய்த போது, அவரை தடுத்து வைத்ததாகக் கூறி மேற்படி மாணவர்களை பேராதனை பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: