தற்போது போர் முடிவடைந்த நிலையில் தமது முன்னைய காணிகளுக்கு திரும்ப முனைந்தவர்களுக்கு அந்த காணிகளை வழங்க மறுத்து வருவதாகவும் அவர்களுக்கு காட்டுப் பகுதிகளில் காணி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த காணிகள் தண்ணீர் வசதியோ வேறு எந்த வசதிகளோ இல்லாத நிலங்கள் எனவும் கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லிணத்துக்குமான ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் பொது மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் தாம் குடியேறி இருந்த முன்னைய காணிகளில் பயிர் செய்ததாகவும், வீடுகளை அமைத்திருந்ததாகவும் அவை அனைத்தும் தற்போது நாசமாக்கப்பட்டதாகப் தமது காணிகளை மீள வழங்கவேண்டும் என்று கோரியதுடன் நஷ்ட ஈட்டையும் வழங்க வேண்டுமென இவர்கள் நல்லிணக்க ஆணைக்குழு முன் கோரிக்கையை முன்வைத்தனர்.
இந்த கோரிக்கைக்கு பதில் அளிக்கையிலேயே கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு தலைவர் புலிகளுக்கு காணி வழங்குவதற்கான அதிகாரம் இல்லை எனக் குறிப்பிட்டதுடன் காணிகளை மீள வழங்கவோ நஷ்ட ஈட்டை வழங்கவோ முடியாதென தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக