சனி, 2 அக்டோபர், 2010

Credit card fraud.கடன் அட்டை மோசடி கனடாவில் இலங்கையர் கைது

கடன் அட்டை மோசடி தொடர்பில் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கோகுலன் கனகரட்ணம் (வயது 26)  என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
போலியான கடன் அட்டைகளையும், கடன் அட்டைகளுக்கான உபகரணங்களையும் வைத்திருந்தமை தன்னியக்க பணப் பரிமாற்ற இயந்திரம் (ஏ.ரி. எம்.)  தொடர்பான 10 குற்றச் செயல்களில் ஈடு பட்டார் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: