திங்கள், 27 செப்டம்பர், 2010

newathirady.com சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 61)"சித்திறெஜினா"..!

மேலும் சுமார் 105 வருடகளுக்கு முன் 1905 ம் ஆண்டில் பொலிஸ் நிலையத்திற்கு குண்டு வைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட குதிராம் போஸ் கைது செய்த பொலிஸ்காரர்களுடன் இருக்கும் அந்தப் படத்தையும் கட்டுரையின் அடிப்பாகத்தில் ஆதாரமாக‌ இணைத்திருக்கிறேன்..

சுபாஸ் சந்திரபோசின் வாழ்க்கைச் சரித்திரத்தில் மறைக்கப்பட்ட இந்த உண்மைகள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. இந்த உண்மைகள் ஏற்கெனவே தெரிந்திருந்தும் அவைகளை மீண்டும் ஒரு முறை ஆராய்ந்து உறுதிப்படுத்திய பின்னரே இந்த இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பித்தேன்..இதற்காக கடந்தகால ஆவணங்கள் பலவற்றை ஆராய‌ வேண்டியிருந்தது.. இவற்றில் மிகப் பழைய ஆவணங்கள் பல‌ மைக்ரோ பிலிம் வடிவில் மட்டுமே இருப்பதால் அவைகளை இங்கே ஆதாரமாக இணைக்க முடியாமல் இருப்பதற்காக‌ வருந்துகிறேன்..

சுபாசின் போராட்ட வரலாற்றிலும் பின்னர் அவரது மரணத்திலும் மறைக்கப்பட்ட பல ஆச்சரியம் நிறைந்த சம்பவங்களுடன் இன்னொரு பாகமொன்றில் உங்களை சந்திக்கிறேன்..... (தொடரும்)



அன்புடன்

சித்திறெஜினா

கருத்துகள் இல்லை: