திங்கள், 27 செப்டம்பர், 2010

முகாம்களில் 10,000 பேரே எஞ்சியுள்ளனர்

10,000 பேரே எஞ்சியுள்ளனர்
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களில் 10,000 ஆயிரம் பேரே இன்னும் மீள்குடியமர்த்த எஞ்சியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சிலர் முகாம்களில் இருந்து காலை வெளியே சென்று தொழில் புரிந்து விட்டு மீண்டும் முகாம்களுக்கு வருவதாக வடக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரி்வித்தார். இடம்பெயர்ந்தவர்களில் 2,85 000 பேர் இதுவரை மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக வடக்கில் தற்போது 5 நிவாரணக் கிராமங்களே எஞ்சியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 12,000 ஆயிரம் போராளிகளில் 4,000 பேர் புனர்வாழ்வு பெற்று திரும்பியுள்ளதாக மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: