புதன், 21 ஜூலை, 2010

TNA போலியான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக முஸ்லிம் காங்கிரஸ

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போலியான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் ஒருமித்த கருத்து நிலவுவதாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு தமது கட்சி பூரண ஆதரவளித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருவதாக முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: