சனி, 24 ஜூலை, 2010

நரபலியை செய்ததாக அப்துல் கபுர் வாக்குமூலம், உடலை ஏர்வாடி தர்ஹா அருகிலும்

மதுரை அருகே உள்ள எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் ஷிரின் பாத்திமா. இவரது கணவர் யூசப் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் மன சோர்வுடன் இருந்த ஷிரின் பாத்திமா, தனது 1 1/2 வயது குழந்தை காதர் யூசுப்புடன், கடந்த 2ஆம் தேதி மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தர்ஹாவுக்கு சென்றுள்ளார்.

பிராத்தனையில் ஈடுபட்ட பாத்திமா இரவு தனது குழந்தையுடன் தங்கியுள்ளார். காலையில் எழுந்ததும் அருகில் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாத்திமா ,  இதுகுறித்து கோரிப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இவ்வழக்கை விசாரித்து வந்த கோரிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன், காயல்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் கபுர்(30) என்பவரை கைது செய்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தையை கொலை செய்து தலையை தூத்துக்குடியிலும், உடலை ஏர்வாடி தர்ஹா அருகிலும் புதைத்திருப்பதாக தெரிவித்தார். குழந்தையின் உடலை மீட்க குற்றவாளி அப்துல் கபுருடன் தாசில்தார், உயர் அதிகாரிகள், போலீசார் ஆகியோர் தூத்துக்குடி விரைந்துள்ளனர்.
தலைச்சம் பிள்ளையை நரபலி கொடுத்தால் தோஷம் நீங்கும் என்று சொன்னதால், இந்த நரபலியை செய்ததாக அப்துல் கபுர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: